சினிமாவை மட்டுமே நான் மிகப்பெரிய வரப்பிரசாதமாக கருதுகிறேன் : மாயத்திரை இசை வெளியீட்டு விழாவில் நடிகை சுகாசினி பேச்சு!
ஸ்ரீ சங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் வழங்கும் “மாயத்திரை” படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது . அசோக் குமார். ஷீலா ராஜ்குமார் , இயக்குனர் சம்பத்குமார் , தயாரிப்பாளர் V சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பு சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர் , செயலாளர் , துணைத்தலைவர் , பொருளாளர் ஆகியோர் கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்தனர் .
விழாவில் குஷ்பு பேசியது : இங்கு சினிமாவைப் பற்றி மட்டும்தான் நான் பேச வந்திருக்கிறேன் . அரசியல் பற்றி அல்ல.தமிழக அரசிற்கும், மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும் ஒரு வேண்டுகோள். மதுபான கடைகளை அனைத்து இடங்களிலும் திறக்க அனுமதி வழங்கி இருக்கிறீர்கள். அதேபோல் திரையரங்குகளையும் 100 சதவீதம் பார்வையாளர்கள் பார்க்க அனுமதித்தால் சினிமா நல்லபடியாக வளர எங்களுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கும் .கொரோனா காலத்திற்கு தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் உடன் 100 சதவீதம் பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். சினிமாவில் தயாரிப்பாளர்களில் சில பிரச்சனைகள் இருந்தால் முரளி ராமசாமி அவர்களை சந்தியுங்கள். விரைவில் தீர்வு கிடைக்கும். சிறிய தயாரிப்பாளர்களுக்கும் மிகப்பெரிய வரப்பிரசாதமாக முரளி ராமசாமி அவர்கள் இருக்கிறார்.
ALSO SEE:
இயக்குனர் சம்பத்குமார் அவர்கள் பேசியவை
இந்தப் புத்தாண்டு தினத்தில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .நான் இந்த மேடையில் நிற்பதற்கு காரணம் இந்த படத்தின் தயாரிப்பாளர் சாய் பாபு அவர்கள்.இந்த படம் ஒரு பேயின் பேரன்பை சொல்லும் படம். திரு பாலுமகேந்திரா அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒரு கதை அதற்கான கதாபாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார் .அதன்படிதான் இந்த படம் அமைந்துள்ளது.இந்த படம் ஒரு கதாநாயகியை மையப்படுத்திய படம். ஷீலா ராஜ்குமார் வாழ்ந்திருக்கிறார். அசோக்குமார் என் நீண்ட கால நண்பர் இந்த படத்தில் நடித்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த இசை வெளியீடு இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட சுகாசினி மற்றும் குஷ்பூ அவர்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். படத்தில் பணியாற்றிய அத்தனை கலைஞர்களுக்கும் எனது பாராட்டுகளும் நன்றிகளும் ” இவ்வாறு பேசினார்.
தயாரிப்பாளர் சாய்பாபு பேசியவை : காஸ்டீயும் டிசைனர் ஆக வாழ்க்கையை தொடங்கி இன்று தயாரிப்பாளராக மாரி இருக்கிறேன் .பல உச்ச நட்சதிரங்களுக்கு காஸ்டீயும் டிசைனர் ஆக பணியாற்றி இருக்கிறேன் . நான் என்னை போல் சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பலபேரை தெரியப்படுத்துவேன் . இந்த சினிமா என்ன எனக்கு கொடுத்ததோ அதையே திருப்பிக்கொடுப்பேன் . இப்படத்தின் இயக்குனர் சம்பத் , அசோக் , ஷீலா மற்றும் தொழில்நுட்ப ஆட்கள் அனைவருக்கும் நன்றி . இந்த விழாவை சிறப்பித்துக்கொடுத்த குஷ்பூ மற்றும் சுஹாசினி அவர்களுக்கும் , தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் .
தொழில்நுட்பக்குழு :
இயக்கம் – தி.சம்பத் குமார்
தயாரிப்பு – ப.சாய்
இசை – S .N அருணகிரி
ஒளிப்பதிவு -இளையராஜா
கலை இயக்கம் – பத்மஸ்ரீ தோட்டா தரணி
நடனம் – ராதிகா
சண்டைப்பயிற்சி – பிரதீப் தினேஷ்
சவுண்ட் என்ஜினியர் – அசோக்
மக்கள் தொடர்பு – ரியாஸ் கே அஹ்மத்