பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

0
294

பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடம்

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கொரோனா அறிகுறிகளுடன் கடந்த 5-ம் தேதி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து எஸ்.பி.பாலசுப்ரமணியம் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டிருந்தார். அதில் தான் உடல்நலம் தேறி வருவதாகவும் தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல்நிலை சீராக உள்ளது நேற்று மருத்துவமனை தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இந்நிலையில் இன்று அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இதுகுறித்து மருத்துவமனை தரப்பில் விடுத்திருக்கும் அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிறப்பு மருத்துவக்குழு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து கண்காணித்து வருகிறது.

நேற்று இரவு முதல் அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். செயற்கை சுவாசக் கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கிறது. மருத்துவ வல்லுநர்கள் குழு அவரது உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது