செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..

0
315

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது..

Chembarambakkam Lake கடைசியாக 2015-ஆம் ஆண்டில் 33 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு பின்னர் இப்போது திறக்கப்படுகிறது.

சென்னையின் பிரதான ஏரியான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து இன்று நண்பகல் 12 மணிக்கு 1000 கன அடி நீர் திறக்கப்படவுள்ளது. இதனால் கரையோர மக்கள், தாழ்வான பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல், இன்று நள்ளிரவு மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால், கடலோர மாவட்டங்களுக்கு முன்னச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனிடேயே, தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக, சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியை எட்டியுள்ள நிலையில் இன்று மதியம் 12 மணியளவில் விநாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நீர் அடையாறு வழியே கடலில் கலக்கும். செம்பரம்பாக்கம் நீர்ப்பாதையில், தாழ்வான பகுதியிலுள்ள மக்களை பாதுகாப்பாக முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர், கடைசியாக 2015-ஆம் ஆண்டில் 33 ஆயிரம் கன அடி வரை தண்ணீர் திறக்கப்பட்டது. அதற்கு பின்னர் இப்போது திறக்கப்படுகிறது.