சென்னை ஏஐசிடிஇ பெயரில் ஆள்சேர்ப்புக்கான போலி செய்திகள் / விளம்பரம் குறித்த எச்சரிக்கை

0
131

சென்னை ஏஐசிடிஇ பெயரில் ஆள்சேர்ப்புக்கான போலி செய்திகள் / விளம்பரம் குறித்த எச்சரிக்கை

சென்னை,

சென்னையில் உள்ள அகில இந்திய தொழில்நுட்ப கல்விக் கழகத்தின் மண்டல அலுவலக ஆள்சேர்ப்பு அதிகாரிகள் என்று கூறிக்கொண்டு வட்ட / மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள்மண்டலத் தலைமை அலுவலர்கள்மண்டல அதிகாரிகள் உள்ளிட்ட அனைத்துப் பணியிடங்களுக்கும் ஆள்சேர்ப்பு நடைபெறுவதாக வந்துள்ள செய்திகள் மற்றும் விளம்பரங்கள் போலியானது எனவும் பொதுமக்கள் இதை நம்ப வேண்டாம் எனவும் ஏஐசிடிஇ கூறியுள்ளது.

 ஆள்சேர்ப்பு குறித்த போலியான செய்திகள் மற்றும் விளம்பரங்கள் வெளியாகியிருப்பது  குறித்து தங்கள்  கவனத்திற்கு  வந்துள்ளது எனவும்  இத்தகைய  ஆள்சேர்ப்புக்கான  அறிவிப்பு  எதையும்  ஏஐசிடிஇ  அதிகாரப்பூர்வ  மின்னஞ்சல்  முகவரியிலோ  அல்லது  www.aicte.india.org  என்ற  இணைய  தளத்திலோ  வெளியிடப்படவில்லைஎனவே  இத்தகைய  போலியான  அறிவிப்புகளுக்கு  ஏஐசிடிஇ  பொறுப்பாகாதுஇதுகுறித்து  பொதுமக்கள்  எச்சரிக்கையுடன்  இருக்குமாறு  கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்  எனவும்  ஏஐசிடிஇ  கூறியுள்ளது.

மேலும் இத்தகைய போலி நபர்களுக்கு எதிராக சட்டப்பூர்வ குற்றவியல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று ஏஐசிடிஇ மண்டல அலுவலர் எம்.சுந்தரேசன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.