ERUMBU movie reviewஎறும்பு சினிமா விமர்சனம் : எறும்பு குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய குழந்தைகளின் பாசஉணர்ச்சி குவியல் | ரேட்டிங்: 4/5

0
441

எறும்பு சினிமா விமர்சனம் : எறும்பு குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய குழந்தைகளின் பாசஉணர்ச்சி குவியல் | ரேட்டிங்: 4/5

மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கிறார்.

சுரேஷ் ஜி தயாரித்து இயக்க, சார்லி, எம் எஸ் பாஸ்கர், ஜார்ஜ் மரியான், மோனிகா சிவா, சக்தி ரித்விக், சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள் நடிப்பில் வந்திருக்கும் படம் எறும்பு.

‘எறும்பு’. ஒளிப்பதிவு காளிதாஸ் கே.எஸ் கவனிக்க, அருண் ராஜ் இசையமைத்துள்ளார். மக்கள் தொடர்பு யுவராஜ்.

கடலூர் அருகே ஒரு கிராமத்தில் கடன் வாங்கி குடும்பத்தை நடத்தும் ஏழ்மை நிலையில் சிக்கி தவிக்கும் அண்ணாதுரை (சார்லி), அவரது முதல் மனைவியின் இரண்டு குழந்தைகள்  மகள் பச்சையம்மா (மோனிகா)  மகன் முத்து (மாஸ்டர் சக்தி ரித்விக்), தாய் பொம்மி (பரவை சுந்தராம்பாள்) மற்றும் இரண்டாம் மனைவி  கமலம் (சூசன் ஜார்ஜ்), ஒரு கைக் குழந்தையுடன்; வாழ்கிறார். அப்பா, பாட்டி இருவரின் அரவணைப்பு இருந்தாலும் சித்தியின் பாசம் கிடைக்காமல் இருக்கின்றனர். கறார் வட்டிக்காரர் சுறாவிடம் (எம் எஸ் பாஸ்கர்) அண்ணாதுரை வட்டிக்குக் கடன் வாங்கி திருப்பி செலுத்த முடியாததால் சிரமப்படுகிறார். குறிப்பிட்ட தேதியில் வட்டியுடன் முழு தொகையையும் திருப்பி தரவேண்டும் என்று மிரட்டப்படுவது மட்டுமில்லாமல் கடன் வாங்கியவரிடம் குழந்தைகள் முன் அண்ணாதுரை அவமானப்படுகிறார். குறிப்பிட்ட தேதிக்குள் கடனை திருப்பி செலுத்துவதாக கூறி கடன் பிரச்சனையைத் தீர்க்கும் முயற்சியில், அண்ணாதுரையும் கமலமும் கரும்பு வெட்டும் கூலி  வேலைக்கு அருகில் உள்ள கிராமத்திற்கு செல்கிறார்கள். இந்த நேரத்தில்  பாட்டி வீட்டிலிருக்கும் தங்க மோதிரத்தை பேரன் ரித்விக்கிடம் கொடுத்து போட்டுக் கொள்ளச் சொல்ல, அவன் அதை தொலைத்து விடுகிறான். அக்காவிடம் அவன் அதை சொல்ல பாட்டியிடம் கூட சொல்லாமல் மறைத்து விட்டு, அக்காவும் தம்பியும் அப்பா, சித்தி வருவதற்குள் அதே மாதிரி மோதிரம் வாங்க திட்டமிடுகிறார்கள். இருவரும் தங்கள் பக்கத்தில் வசிக்கும் சிட்டுவின் (ஜார்ஜ் மரியன்) உதவியுடன் பல சிறு சிறு வேலைகளை செய்து பணம் சேகரிக்க தொடங்குகிறார்கள். இருந்தாலும் மோதிரம் வாங்கும் அளவுக்கு பணம் சேரவில்லை. கூலி வேலைக்கு சென்ற அப்பாவும், சித்தியும் வீடு வந்து சேர்கிறார்கள். குறிப்பிட்ட தேதி அன்று வட்டிக்கு பணம் கொடுத்த சுறா நெருக்கடி கொடுக்க, ஒரளவு பணத்தை புரட்டும் அண்ணாதுரை மோதிரத்தை விற்று மீதி பணத்தை கொடுக்க முடிவு செய்கிறார். சித்தி மோதிரத்தை எடுக்க வீட்டிற்குள் வருகிறார்.அதன் பின் என்ன நடந்தது? சித்தியிடம் குழந்தைகள் மாட்டிக் கொண்டார்களா? தொலைந்த மோதிரம் கிடைத்ததா? காசு சம்பாதிக்க குழந்தைகள் என்ன என்ன வேலைகள் செய்தார்கள்? குறிப்பாக முழு குடும்பமும் நெருக்கடியில் இருக்கும் நேரத்தில் இவர்களின் சிறிய பங்களிப்பு என்ன மாற்றத்தை ஏற்படுத்தியது? என்பதே கதையின் முடிவு.

இரண்டு குழந்தை நட்சத்திரங்கள் மோனிகா மற்றும் மாஸ்டர் சக்தி ரித்விக் குழந்தைத்தனம், குறும்புத்தனம் இரண்டும் கலந்து மிகையில்லா நடிப்பு படத்திற்கு பலம். மேலும் அவர்களின் அக்கா, தம்பி பாசம் இக்கட்டான நேரத்தில் உதவும் குணம், பணத்தை புரட்ட அவர்கள் எடுக்கும் முடிவு, ஒற்றுமையாக இருந்து கிடைத்த வேலைகளை செய்து பணத்தை சேமித்து வைத்து நாட்களை எண்ணி பயந்து நடுங்கும் விதம் என்று தத்ரூபமான நடிப்பு படத்திற்கு நல்ல கதாபாத்திர தேர்வு.

மனதளவில் பாதிக்கப்பட்ட சிட்டு கதாபாத்திரத்தின் மூலம் ஜார்ஜ் மரியன் வெள்ளேந்தி மனதுடன் அப்பாவித்தனமான பேச்சு, செல்போனில் கலந்துரையாடும் விதம், குழந்தைகளின் கஷ்டத்தை புரிந்து கொண்டு உதவிகளை செய்வது, குழந்தைகளின் பாதுகாவலனாகவும் இருந்து சில இடங்களில் நகைச்சுவையில் சுவாரஸ்யத்தை கூட்டுகிறார். பாராட்டுக்கள்

முன்னணி குணச்சித்திர நடிகர்களாக படத்திற்கு தங்கள் நடிப்பால் வலு சேர்க்கும் எம்.எஸ்.பாஸ்கர், சார்லி, ஆகிய இருவரின் கதாபாத்திரங்களும் சூசன் ஜார்ஜ், பரவை சுந்தராம்பாள், ஜெகன் மற்றும் பல கிராமத்து முகங்கள் படத்திற்கு கூடுதல் பலத்தை கொடுத்து சிறப்பித்துள்ளனர்.

ஒளிப்பதிவாளர் காளிதாஸ் கே.எஸ்.கிராமத்து குழந்தைகளின் கள்ளமில்லா உலகத்தை தன் காட்சிக் கோணங்களாலும் மற்றும் குழந்தைகள் ரசிக்கும் வண்ணம் அவர்கள் நினைவில் நீங்கா இடம் பிடிக்கும் பாடல்களாலும் பின்னணி இசையில் அருண் ராஜ் ஸ்கோர் செய்துள்ளார்.

முதலில் எறும்பு என்ற தலைப்பு இந்தப் படத்திற்கு ஆரம்பத்தில் பொருத்தமற்றதாகத் தோன்றலாம். ஆனால் கதையின் நகர்வுக்கு பின் படத்திற்கு இதைவிட பொருத்தமான தலைப்பு இருந்திருக்க முடியாது என்பதை உணரத் செய்துவிடுகிறார் இயக்குனர் சுரேஷ்.ஜி. எப்படி எறும்புகள் தங்கள் உடல் எடையை விட 40 மடங்கு எடையை தூக்கி செல்கின்றதோ அது போல் தொலைந்து போன ஒரு கிராம் தங்க மோதிரத்தை வாங்க மொத்த கிராமத்தில் உள்ள சின்ன சின்ன வேலையையும் இழுத்து போட்டு செய்து பணத்தை சேமிக்க தொடங்கும் அக்கா, தம்பி, அவர்களின் அப்பா பாசம் அதை விட ஆர்வத்துடன் உழைக்கத் தொடங்கும் பொறுப்புள்ள இளம் குழந்தைகளின் உழைப்புத் தன்மையைப் பற்றியது எரும்பின் கதை. சிறந்த கதாபாத்திர தேர்வு, தெளிவான கதை, கிராமத்து வேலைகள், கஷ்டப்படும் தந்தைக்கு உதவும் தன்மை, உணர்ச்சிகள் நிறைந்த சுவாரஸ்யத்துடன் கச்சிதமாக கொடுத்துள்ளார் இயக்குனர் சுரேஷ்.ஜி.

மொத்தத்தில் மன்ட்ரூ ஜி வி எஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் இயக்குநர் சுரேஷ் குணசேகரன் தயாரித்திருக்கும் எறும்பு குடும்பத்துடன் கண்டு களிக்க வேண்டிய குழந்தைகளின் பாசஉணர்ச்சி குவியல்.