இ-மெயில் சினிமா விமர்சனம் : இமெயில் துரித பண ஆசை விபரீத ஆன்லைன் விளையாட்டு விளைவிக்கும் பேராபத்து | ரேட்டிங்: 2.5/5

0
177

இ-மெயில் சினிமா விமர்சனம் : இமெயில் துரித பண ஆசை விபரீத ஆன்லைன் விளையாட்டு விளைவிக்கும் பேராபத்து | ரேட்டிங்: 2.5/5

எஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி சார்பில் இமெயில் படத்தை தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் எஸ்.ஆர்.ராஜன்.

இதில் ராகினி திவேதி, அசோக் குமார், ஆதவ் பாலாஜி, ஆர்த்தி ஸ்ரீP, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பெல்லி முரளி பார்க், அக்ஷய் ராஜ், வனிதா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, ரத்னா, ஷைலு, ஸ்வேதா, தேஜஸ்வினி, தியா, அஜித் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள் :இசை – அவினாஷ் கவாஸ்கர்,பின்னணி இசை – ஜூபின், ஒளிப்பதிவு – செல்வம் மாதப்பன், ஸ்டண்ட் – மாஸ் மதா, மக்கள் தொடர்பு : ஏ.ஜான்.

தாயின் அரவணைப்பில் வளரும் அபி (ராகினி திவேதி) , திடீரென்று தாய் இறந்து விட வீட்டில் வேலை செய்யும் ஆட்களால் ஏமாற்றப்பட்டு அனாதை இல்லத்தில் வளர்கிறார். கஷ்டப்பட்டு படித்து முடித்தாலும் நல்ல வேலை கிடைக்காமல்; வீட்டு மனைகள் விற்கும் மனோபாலாவின் அலுவலகத்தில் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய அதிலும் சிக்கல் வந்து வேலையை விட நேர்கிறது. சிறு வயதிலிருந்தே ஆன்லைன் விளையாட்டில் ஆர்வமுள்ள அபிக்கு ஒரு நாள் டை கேம் என் ஆன்லைன் கேமில் விளையாட ஆரம்பிக்கிறார். அதில் வரும் மூன்று நபர்களில் யார் இறப்பார்கள் என்று சரியாக கணித்தால் பணம் கிடைக்கும் என்பதையறிந்து விளையாட தொடங்கிறார். அந்த விளையாட்டின் மூலம் லட்சக்கணக்கில் பணம் கிடைக்க ஆரம்பிக்க, மகிழ்ச்சியாகும் அபி தீவிரமாக விளையாடுகிறார். இதனிடையே அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் விமல் (அசோக் குமாரை) காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்.  மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையில் ஆன் லைன் விளையாட்டால் அபிக்கு விபரீதம் ஏற்படுகிறது. முதலில் பத்து லட்சம் நஷ்டம் ஏற்படுகிறது. அந்த நஷ்டத்தை ஈடுகட்ட ஒரு ஹார்ட் டிஸ்கை எடுத்து வந்து தரவேண்டும் என்ற நிபத்தனை கட்டாயத்தில் தள்ளப்படுகிறார். இந்த விளையாட்டு பிரச்சனையில் இருந்து தன் மனைவியைக் காப்பாற்ற முயலும் விமல் உயிருக்கு ஆபத்தும், தன் நெருங்கிய தோழிகளுக்கும் இன்னல்கள் ஏற்படுகிறது, இதனால் நேரடியாக களத்தில் இறங்கி தனது பிரச்சனையை தீர்க்க நினைக்கும் அபி அதை எப்படி செய்கிறார்? அது என்ன பிரச்சனை? இதற்கு பின்னணியில் இருப்பவர்கள் யார்? என்பதை சொல்வதுதான் ‘இ-மெயில்’.

நாயகனாக நடிக்கும் அசோக்கிற்கு நெகடிவ் கேரக்டராக படத்தில் குறைந்த வாய்ப்புகள் இருந்தாலும் அதை நிறைவாக செய்துள்ளார்.

கதையின் நாயகியாக நடிக்கும் ராகினி திவேதி தான் படம் முழுவதும் வந்து தாராளமாக காதல் காட்சியிலும், அதிரடியான மாஸ் காட்டி ஆக்ஷன் காட்சியிலும் தூள் பறத்துகிறார். அவரின்; முகத்தில் சிறிது முதிர்ச்சி இருந்தாலும் நடிப்பு இளமை.

மற்ற கதாபாத்திரங்களில் ஆதவ் பாலாஜி, பில்லி முரளி, ஆர்த்தி ஸ்ரீ, மனோபாலா, லொள்ளு சபா மனோகர், பெல்லி முரளி பார்க், அக்ஷய் ராஜ், வனிதா, ஆரஞ்சு மிட்டாய் பிரபா, ரத்னா, ஷைலு, ஸ்வேதா, தேஜஸ்வினி, தியா, அஜித் குமார் ஆகியோர் தங்கள் பணியை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எம்.செல்வத்தின் ஒளிப்பதிவு படத்தை கலர்ஃபுல்லாக காட்சிகளில் வர்ணஜாலம் காட்டியிருக்கிறது.

கவாஸ்கர் அவினாஷ் இசையில் பாடல்கள் கேட்கும் வகை. ஜூபினின் பின்னணி இசை திரைக்கதையின் வேகத்திற்கு வலு சேர்க்கும் வகையில் பயணித்துள்ளது.

மாஸ் மதாவின் ஸ்டண்ட் காட்சிகள் நாயகிக்கு தத்ரூபமாக வடிவமைத்து கொடுத்திருப்பதற்கு கை தட்டல் பெறுகிறார்.

க்ரைம் சஸ்பென்ஸ் த்ரில்லர் ஜானர் கதை, படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை, அடுத்து என்ன நடக்கிறது என்பதை எதிர்பார்ப்புடன் நகர்த்த முற்பட்டிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஆர்.ராஜன். முதலில் காதல் கதையாக முன்னேறும்போது, நாயகியின் கேமிங்கின் அடிமைத்தனமான தன்மையையும் அதைத் தொடர்ந்து ஏற்படும் மோசமான விளைவுகளையும் படம் திறம்பட சித்தரித்து கதைக்களம் விரிவடைகிறது. போனில் விளையாடும் விளையாட்டு பிரச்சனையில் தள்ள, நிஜத்தில் அந்த விளையாட்டை விளையாட வேண்டிய கட்டாயத்தையும்,  அந்த அடிமைத்தனமான கேமில்லில் நிஜத்தில் நாயகி மாட்டிக் கொண்டு தப்பிக்க போராடுவதையும், தன் மதிநுட்பத்தை பயன்படுத்தி எப்படி தப்பிக்கிறார் என்பதை திறம்பட சொல்ல நினைத்திருக்கும் இயக்குனர் எஸ்.ஆர்.ராஜனுக்கு பாராட்டுக்கள். க்ளைமேக்ஸ் காட்சி சஸ்பென்ஸ் ட்விஸ்ட் கொடுத்தாலும்  கதையின் விவரிப்பு, அதை சொல்ல வந்த விதத்தில் சிறிது தடுமாற்றத்துடன் கொடுத்திருப்பதை தவிர்த்து இருந்தால் பேசப்பட்டிருக்கும்.

மொத்தத்தில் எஸ்ஆர் பிலிம் ஃபேக்டரி சார்பில் தயாரித்திருக்கும் இமெயில் துரித பண ஆசை விபரீத ஆன்லைன் விளையாட்டு விளைவிக்கும் பேராபத்து.