சரக்கு கையாளுதல் மற்றும் கொள்கலன்களில் புதிய சாதனையை சென்னை துறைமுகம் படைத்துள்ளது

0
143

சரக்கு கையாளுதல் மற்றும் கொள்கலன்களில் புதிய சாதனையை சென்னை துறைமுகம் படைத்துள்ளது

சென்னை2021 அக்டோபரில் 44,65,459 டன் சரக்குகளை கையாண்டு அதன் முந்தைய சாதனைகளை சென்னை துறைமுகம் முறியடித்துள்ளது. இதற்கு முன்னர் 2021 ஜூனில் 39,43,100 டன் சரக்குகளை சென்னை துறைமுகம் கையாண்டிருந்தது.

மேலும் 2021 அக்டோபர் மாதத்தில் 1,53,948 டிஇயூ கொள்களன்களை கையாண்டு முக்கிய சாதனையை சென்னை துறைமுகம் எட்டியுள்ளது. 2020 டிசம்பர் மாதத்தில் 1,51,754 டிஇயூ கொள்களன்களை கையாண்டது முந்தைய சாதனையாக இருந்தது.

 2020 டிசம்பரில் கையாளப்பட்ட 93,484 டிஇயூ கொள்களன்களை விட அதிகமாக 2001 அக்டோபரில் 94,330 டிஇயூ கொள்களன்களை கையாண்டு சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் சாதனை படைத்துள்ளது.

முனைய செயல்பாட்டாளர்களான சென்னை கன்டெய்னர் டெர்மினல் பிரைவேட் லிமிடெட் மற்றும் சென்னை இன்டர்நேஷனல் டெர்மினல் பிரைவேட் லிமிடெட்இதர பங்குதாரர்கள் மற்றும் துறைமுக அலுவலர்களை மேற்கண்ட சாதனைக்காக சென்னை துறைமுக பொறுப்பு கழக தலைவர் திரு சுனில் பாலிவால் ஐஏஎஸ் பாராட்டியுள்ளார்