நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: சென்னையில் வெறும் 3.9% வாக்குப்பதிவு | மாவட்ட வாரியாக காலை 9 மணி நிலவரம்
சென்னை: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், காலை 9 மணி வாக்குப்பதிவு நிலவரம் வெளியாகியுள்ளது. இதில், சென்னையில் மிக மந்தமாக வாக்குகள் பதிவாகியுள்ளன.
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் ஆகியவற்றில் 12,500-க்கும் மேற்பட்ட வார்டுகள் உள்ளன. இந்த வார்டுகளுக்கான மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பதற்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் இன்று நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. காலை 9 மணி நிலவரப்படி சென்னையில் மிக மிகக் குறைவாக வெறும் 3.96% வாக்குகள் பதிவாகியுள்ளன.
9 மணி வாக்குப்பதிவு நிலவரம் மாவட்ட வாரியாக:
மாவட்டம் | வாக்குப்பதிவு சதவீதம் |
சென்னை | 3.96% |
பெரம்பலூர் | 9.77% |
கோவை | 6.79% |
நாகை | 8.05% |
திருப்பூர் | 7.75% |
மயிலாடுதுறை | 9.02% |
சேலம் | 12.97% |
காஞ்சிபுரம் | 11.02% |
நாமக்கல் | 12.75% |
திருச்சி | 13.00% |
கடலூர் | 10.11% |
கன்னியாகுமரி | 7.00% |
ராணிப்பேட்டை | 7.70% |
தென்காசி | 12% |
புதுக்கோட்டை | 10.74% |
ராமநாதபுரம் | 8.88% |
திருவாரூர் | 10.25% |
அரியலூர் | 12.84% |
கிருஷ்ணகிரி | 9.31% |
தேனி | 12.00% |
விழுப்புரம் | 11.37% |
மதுரை | 24.62% |
வாக்குப்பதிவு தொடங்கி முதல் 2 மணி நேரத்தில் தலைநகர் சென்னையில் தான் மிக மிகக் குறைவான அளவில் வாக்குப்பதிவாகியுள்ளது. திருச்சி, அரியலூர் போன்ற மாவட்டங்களில் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.