நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வரிசையில் நின்று முதலமைச்சர் வாக்களித்தார்.

0
163

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வரிசையில் நின்று முதலமைச்சர் வாக்களித்தார்.

சென்னை, தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகளுக்கும், 138 நகராட்சிகளுக்கும், 489 பேரூராட்சிகளுக்கும் என மொத்தம் 648 நகரப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தலுக்கான வாக்குப்பதிவு காலை 7 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.

பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் உள்பட பல்வேறு தரப்பினரும் நீண்ட வரிசையில் நின்று தங்கள் வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வாக்களித்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள எஸ்ஐடி கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடியில் அவர் வாக்களித்தார்.

மனைவி துர்காவுடன் வாக்குச்சாவடிக்கு வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பொதுமக்களுடன் நீண்ட வரிசையில் நின்று பின்னர் தனது வாக்கை பதிவு செய்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ”ராணுவம் வரும் அளவுக்கு கோவையில் எதுவும் நடைபெறவில்லை. கோவையில் எந்த சம்பவமும் நடைபெறவில்லை. கோவையில் தோல்விக்கான காரணத்தை மூடி மறைக்க அதிமுக நாடகமாடியுள்ளது. எங்கள் கணிப்பின்படி 21 மாநகராட்சிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்” என்று கூறினார்.

அதே போல் நடிகர் மன்சூர் அலிகான், அரும்பாக்கம் திருவடி துவக்கப் பள்ளியில் தனது ஓட்டை பதிவு செய்தார்!