கடைசி உலகப்போர் விமர்சனம் : கடைசி உலகப்போர் அறிவியல் கற்பனை கலந்த அரசியல் சதுரங்க போர் ஆட்டம் | ரேட்டிங்: 3.5/5
ஹிப்-ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட் சார்பில் தயாரித்து, எழுதி இயக்கியிருக்கிறார் ஹிப்ஹாப் ஆதி.
இதில் ஹிப்ஹாப் ஆதி, நாசர், நட்டி (நடராஜ்), அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-இசை: ஹிப்ஹாப் ஆதி, ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா, எடிட்டர்: பிரதீப் இ ராகவ், ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ, கலை இயக்குனர்: ஆர்.கே.நாகு, டிஐ : இன்ஃபினிட்டி மீடியா, டிரெய்லர் எடிட்: அருண், விளம்பர வடிவமைப்பாளர்: சிவகுமார் எஸ் (சிவாடிஜிட்டல் ஆர்ட்), வண்ணம்: சண்முக பாண்டியன் எம், நிர்வாகத் தயாரிப்பாளர்: வாசுதேவன் ஆர், தயாரிப்பு மேலாளர்: டி.என். கோகுல்நாத், எஸ்.பார்த்திபன்,தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்: சி. ஹரி வெங்கட், ஆடை வடிவமைப்பாளர்: கீர்த்திவாசன்,பாடல் வரிகள்: ஹிப்ஹாப் ஆதி, விக்னேஷ் ஸ்ரீகாந்த், ஃபோட்டி செவன், சிவவாக்கியர்,ஒலி வடிவமைப்பு: ராகவ் ரமேஷ், ஹரி பிரசாத் எம்.ஏ, கலவை பொறியாளர்: தபஸ் நாயக், விஷ{வல் எசூஃபெக்ட்ஸ்: 85 எஃப் எக்ஸ், கோர் டைரக்ஷன் டீம்: ஹட்சன் சாமுவேல் பிரின்ஸ் (இணை இயக்குனர்), பாரத் பாலாஜி, நிதிஷ், ஜே.பி.,மக்கள் தொடர்பு : சதீஷ் எஸ்2 மீடியா
2029 மூன்றாம் உலகப் போர் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது, உலகப் பொருளாதாரம் முற்றிலும் வீழ்ச்சியடைந்து நெருக்கடி ஏற்பட்டு பெட்ரோலின் விலை ஒரு லிட்டர் 500 ரூபாய் அளவு அதிகரிக்கிறது. அதே நேரத்தில், சீனா, ரஷ்யா மற்றும் சில நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் இருந்து வெளியேறி ரிபப்ளிக் என்ற மற்றொரு சர்வதேச அமைப்பை உருவாக்குகின்றன. நடுநிலையாக இருக்கும் இந்தியா மீது ஒடுக்குமுறை மூலம் ரிபப்ளிக் நாடுகள் வலுக்கட்டாயமாக கட்டுப்பாட்டை அடைய முயற்சிக்கும் நேரத்தில் நம் நாட்டில், குறிப்பாக தமிழ்நாட்டில் 2028ல் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றி படம் விவரிக்கிறது. தமிழ்நாட்டு அரசியலில் தன்னை கிங்மேக்கர் என்று சிலாகித்து கொள்ளும் நடராஜ் நடக்கும் சம்பவங்களை தன்னுடைய கண்ணோட்டத்தில் விவரிப்பதிலிருந்து கதைக்களம் தொடங்க இருந்தாலும் படத்தின் ஆரம்பத்திலேயே இந்தக் கதையின் நாயகன் அவர் அல்ல தமிழரன் (ஹிப்ஹாப் ஆதி) தான் என்று கூறிவிடுகிறார். தமிழ்நாட்டு அரசியலில் முதலமைச்சரின் (நாசர்) மச்சான் நடராஜ் (எ)நட்டி, தன்னை கிங் மேக்கர் என்று சொல்லிக்கொண்டு அதிகாரத்தை வைத்து கொண்டு தன் சொல்படி கேட்க வேண்டும் என்று அரசியல் சாணக்யனாக பல வழிகளில் ஊழல் செய்து பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார். இவருக்கு தலைவலியாக ஐ.நா சபையின் ஆயுதப் பயிற்சி சிறப்புப் பிரிவு அதிகாரியான தமிழரசன் வந்து சேருகிறார். இதற்கு காரணம் மலைக்காட்டில் இன்பச் சுற்றுலா செல்லும் முதல்வரின் மகள் கீர்த்தனாவை (அனகா) வனவிலங்கு தாக்குதலிலிருந்து காப்பாற்ற அன்றிலிருந்து நட்பு ஏற்பட்டு இருவருக்கும் காதல் மலர்கிறது. முதல்வர் உடல் நலம் பாதிக்கப்பட, தன் மகள் கீர்த்தனாவை அரசியலில் கொண்டு வர முயற்சி செய்கிறார். அதனால் நட்டியின் வற்புறுத்தலின் பேரில் கல்வி அமைச்சராக பதவி ஏற்கும் கீர்த்தனா, தமிழரசனின் ஆலோசனைப்படி கல்வி கொள்கையில் மக்களுக்கு பயன் தரும் வகையில் மாற்றம் கொண்டு வரும் திட்டத்தை வெளியிடுகிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நடராஜ், வேறு வழியின்றி அமைதி காக்கிறார்.இந்நிலையில் மூன்றாம் உலகப் போரால் துறைமுகங்களில் கட்டுப்பாடுகள் தீவிரமடைகிறது. கமிஷனாக பெற்ற பணம் துறைமுகத்தில் முடங்கியிருக்க அதை வெளியே எடுக்க நட்ராஜ் தமிழ்நாட்டில் கலவரத்தைத் தூண்டி அதற்கு ஹிப்ஹாப் ஆதியை தீவிரவாதியாக சித்தரித்து கைது செய்யவைக்கிறார். இந்நிலையில் ரிபப்ளிக் நாடுகள், இந்தியாவை கொடூரமாக தாக்குகின்றன. நாட்டில் அவசர காலம் அறிவிக்கப்படுகிறது.தகவல் தொடர்பு முற்றிலுமாக தூண்டிக்கப்படுகிறது. இந்தியாவைக் கைப்பற்ற முதலில் தமிழ்நாட்டில் கால் ஊன்றும் ரிபப்ளிக் நாடுகளை சேர்ந்த ராணுவத்தினர் தமிழக அரசை மிரட்ட அதிகார பேரம் பேசுகின்றனர். வேறு வழியின்றி சம்மதிக்கும் முதலமைச்சர் நாசர் அவர்களின் கட்டுப்பாட்டில் இருக்கிறார். அதன் பின் ரிபப்ளிக் ராணுவத்தினர்; குடிமக்களின் மனதில் அச்சத்தை ஏற்படுத்த கொடூரமாக சித்திரவதை செய்வதன் மூலம் அராஜகம் செய்கின்றனர். அப்பொழுது தமிழரசன், நட்டி, சில இந்திய ராணுவ படை, பொதுமக்கள் என்று கொஞ்சம் திரளான மக்கள் அங்கிருந்து தப்பித்து காட்டுப்பகுதியில் தஞ்சம் அடைகின்றனர். அங்கிருந்த மக்களை திரட்டி தமிழ்நாட்டையும், முதலமைச்சரையும், அவரது மகளையும் காப்பாற்ற வியூகம் அமைத்து அதிரடி தாக்குதல் நடத்தி ரிபப்ளிக் ராணுவத்தினரை எப்படி துரத்துகின்றனர்? என்பதே படத்தின் மீதிக்கதை.கடைசி உலக போர், ஆதி தனது மிக லட்சியத் திட்டத்தை புதிய அளவில், தமிழ் பார்வையாளர்களுக்குப் புதிய மெருகுடன் உருவாக்கி எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார் என்பது பாராட்டுக்குரியது. தன் கதாபாத்திரத்தை போதிய அளவு விவரிக்க நேரம் கொடுக்காமல், நட்டிக்கு படத்தில் மிக முக்கிய பங்கு கொடுத்துள்ளது சிறப்பு. முதலில் காதலனாக களமிறங்கி பின்னர் நாட்டை காப்பாற்றும் புதிய பொறுப்புடன் ஹீரோவின் அணுகுமுறையுடன் இல்லாமல் தன் பங்களிப்பை கூட்டு முயற்சியில் கனகச்சிதமாக கொடுத்து கை தட்டல் பெறுகிறார். ஆதி படத்தில் சில ஆர்கானிக் கமர்ஷியல் கூறுகளை உருவாக்க முயற்சித்து பல அற்புதமான தருணங்கள் வி எஃப் எக்ஸ் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்பை அற்புதமாக செயல்படுத்தியுள்ளார். வெல்டன்.
கிங்மேக்கர் நடராஜ் மனசாட்சியே இல்லாத ஒருவராக நன்றாக எழுதப்பட்ட வசனங்கள், நையாண்டியின் சாயல் மற்றும் அற்புதமான நடிப்பால் மனதை திருடுகிறார்.படம் முழுவதும் தன்னுடைய குள்ளநரித்தனமான செய்கையால் ஆட்சி அதிகாரத்தையே தன் கைப்படிக்குள் வைத்திருக்கும் தந்திரக்காரராக, படத்தின் பெரும் பகுதியையும், உலக போர் சூழலையும் புரியும்படி தன் சொந்தக் குரலில் விவரித்து, தன்னுடைய அரசியல் சாணக்கியத்தனத்தையும் இடையே புகுத்தி திறம்பட அழுத்தமாக பதிவு செய்வதில் வெற்றி பெறுகிறார்.
இவர்களுடன் காதலி மற்றும் முதலமைச்சரின் மகளாக அனகா, அழகம் பெருமாள், ஹரிஷ் உத்தமன், முனிஷ்காந்த், சிங்கம்புலி, கல்யாண் மாஸ்டர், இளங்கோ குமரவேல், தலைவாசல் விஜய், மகாநதி சங்கர், இளங்கோ குமணன், ஷாரா, வினோத் ஜி.டி, குகன் பிரகாஷ், அலெக்ஸ், ராக்கெட் ராஜேஷ், சூ கோய் ஷெங் ஆகியோர் போராட்ட கதைக்களத்தின் முக்கிய புள்ளிகளாக இருந்து வழி நடத்தி செல்கிறார்கள்.
படத்தின் ஒட்டுமொத்த பொழுதுபோக்கை உறுதி செய்வதில் ஹிப்ஹாப் ஆதியின் பின்னணி இசை பெரும் பங்கு வகிக்கிறது. திரைக்கதையில் தொய்வு ஏற்படும் பகுதிகளிலும் கூட, ஸ்கோர் அதிரவைத்து மகிழ்விக்கிறது.
ஒளிப்பதிவாளர்: அர்ஜுன்ராஜா, எடிட்டர்: பிரதீப் இ ராகவ், ஸ்டண்ட் இயக்குனர்: மகேஷ் மேத்யூ, கலை இயக்குனர்: ஆர்.கே.நாகு, விஎஃப் எக்ஸ்; மற்றும் பல தொழில் நுட்ப கலைஞர்;களின் பங்களிப்பு, உலகப் போரின் இன்னல்களையும், பாதிப்புக்களையும், எதிர்கால சூழ்நிலைகளையும், போராட்ட களத்தையும் நம் கண் முன்னே விவரித்து பல சுவாரசியமான காட்சிகளுக்கு வழி வகுத்துள்ளது.
முதல் பாதி முழுவதும்; ஒரு நுண்ணிய பார்வையில் உள்@ர் தமிழ்நாட்டு அரசியலின் நட்டியின் பார்வையில் கவனமாகவும் மெதுவாகவும் உருவாக்கி இரண்டாம் பாதி கழுகின் பார்வையாக உலகப் போர், ஒரு இராணுவ மேஜர், இரண்டு அரசியல் தலைவர்கள், ஒரு கிங்மேக்கர் மற்றும் போலீஸ்காரர்கள், கம்யூனிசம், பரப்புரை, அணுசக்தி மற்றும் பல அரசியல் கருத்துக்களுடன், திரைப்படம் அதீதமாக மாறுவதை உணர முடிகிறது. மூன்றாம் உலகப்போர் எப்படி கடைசி உலகப் போராக மாறுகிறது என்பதை சிறப்பாக கொடுத்துள்ள இயக்குனர் ஹிப்ஹாப் ஆதிக்கு வாழ்த்துக்கள். ஹிப்ஹாப் தமிழா ஆதி இயக்கியிருக்கும் இந்த படம் ரசிக்க வேண்டிய அனுபவம் இப்படத்தில் முழுவதுமாக நம்பவைத்தாரா என்பது விவாதத்திற்குரியது, ஆனால் அவர் இயக்குனராக முழுவதுமாக பிரகாசித்துள்ளார் என்று நிச்சயமாக சொல்லலாம்.
மொத்தத்தில் ஹிப்-ஹாப் தமிழா எண்டர்டெயின்மென்ட் சார்பில் ஹிப்ஹாப் ஆதி தயாரித்து, எழுதி இயக்கியிருக்கும் கடைசி உலகப்போர் அறிவியல் கற்பனை கலந்த அரசியல் சதுரங்க போர் ஆட்டம்.