ஹிட்லர் சினிமா விமர்சனம் (HITLER MOVIE REVIEW) : ஹிட்லர் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சாமான்யன் | ரேட்டிங்: 2.5/5
பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா மற்றும் டி.ஆர். சஞ்சய் குமார் தயாரித்திருக்கும் ஹிட்லர் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் டானா எஸ்.ஏ.
இதில் விஜய் ஆண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரியா சுமன், சரண் ராஜ், தமிழ் (இயக்குனர்), ஆடுகளம் நரேன், விவேக் பிரசன்னா, ரெடி கிங்ஸ்லி உள்ளிட்டவர்கள் படத்தில் நடித்துள்ளார்கள்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :- ஒளிப்பதிவு : நவீன் குமார், இசை : விவேக் – மெர்வின், கலை : சி.உதயகுமார் , படத்தொகுப்பு : சங்கத்தமிழன் , பாடல் வரிகள் : கிருத்திகா நெல்சன், கு.கார்த்திக், பிரகாஷ் பிரான்சிஸ், நடனம் : பிருந்தா, லீலாவதி, சண்டைக்காட்சி : முரளி ஜி, ஆடை வடிவமைப்பாளர் ;: அனுஷா ஜி,ஸ்டில்ஸ் : அருண் பிரசாத், மக்கள் தொடர்பு : சதீஷ் (எய்எம்)
தேனி மாவட்ட மலை கிராமத்தில் மழையால் ஆற்றில் நீர் அதிகரித்த கடக்க பாலங்கள் இல்லாததால்; கூலித் தொழிலாளி பெண்கள் மூழ்கிய பாதையை கடக்க முயலும் போது ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்து இறக்கும் காட்சிகளுடன் படம் தொடங்குகிறது. சென்னை திருவல்லிக்கேணியில் வங்கி வேலைக்கு வரும் செல்வா (விஜய் ஆண்டனி) கருக்காவேல் (ரெடின் கிங்ஸ்லி) உடன் அறையில் தங்குகிறார்.இந்நிலையில் தேர்தல் நெருங்கி வர ஐந்தாவது முறையாக ஆட்சிக்கு வர காத்திருக்கிறது தமிழ் திராவிட சமுதாய கட்சி. இந்த கட்சியின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருக்கும் ராஜவேலு (சரண்ராஜ்) ஊழல் வழக்கில் சிக்கி மக்களின் ஆதரவை இழக்கிறார். ராஜவேலு எப்படியாவது மக்களுக்கு பணத்தை கொடுத்து தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்று முனைப்புடன் இருக்கிறார். ஆனால் தொகுதிக்கு பிரித்துக் கொடுக்க எடுத்துச் செல்லப்படும் கோடிக்கணக்கான பணத்தை யாரோ அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் அமைச்சரின் ஆட்களை கொலையும் செய்து பணத்தை திருடியும் செல்கிறார்கள். ராஜவேலு தொடர்ந்து தனது கருப்பு பணத்தை மீட்கவும் இந்த கொலைகளை பற்றி விசாரிக்கவும் துணை கமிஷனர் சக்தியை (கௌதம் வாசுதேவ் மேனன்) நியமிக்கிறார். இதனிடையே செல்வா ரயில் நிலையத்தில் சந்திக்கும் சாராவை (ரியா சுமன்) பார்த்ததும் அவர் மேல் காதல் கொள்கிறார். செல்வா ஒவ்வொரு முறையும் ரியா சுமனை உள்@ர் ரயிலில் சந்திக்கும் போதெல்லாம் இந்த கொலை மற்றும் ராஜவேலு அனுப்பும் பணம் திருட்டு நடைபெறுகிறது என்பதை ஊகிக்கும் போலீஸ் செல்வாவை பின் தொடர்கிறது. அதன் பின் நடந்தது என்ன? செல்வாவுக்கும் இந்த கொலை மற்றும் திருட்டுக்கு சம்மந்தம் உள்ளதா? துணை கமிஷனர் சக்தி கொலையாளியை கண்டுபிடித்து திருடப்பட்ட பணத்தை மீட்டாரா? மலை கிராமத்தில் கூலித் தொழிலாளி பெண்கள் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி இறந்ததற்கும் சென்னையில் நடைபெறும் இந்த சம்பவத்துக்கு என்ன தொடர்பு என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
விஜய் ஆண்டனி எப்பொழுதும் போல் சீராக நடித்துள்ளார், மிரட்டலான கண்டிப்பு நிறைந்த துணை கமிஷனராக கௌதம் வாசுதேவ் மேனன், இளமை துள்ளும் காதலியாக ரியா சுமன், அரசியல்வாதியாக சரண் ராஜ், தமிழ் (இயக்குனர்), ஆடுகளம் நரேன், விவேக் பிரசன்னா, ரெடி கிங்ஸ்லி ஆகியோர் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர்.
ஒளிப்பதிவு : நவீன் குமார், இசை : விவேக் – மெர்வின், கலை : சி.உதயகுமார் , படத்தொகுப்பு : சங்கத்தமிழன் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்கள் கச்சிதமாக கதைக்கேற்ற உழைப்பினை கொடுத்துள்ளனர்.
ஹிட்லர் யூகிக்கக்கூடிய பழிவாங்கும் சக்தி மிகுந்த கதையாக நிறைய திருப்பங்களுடன் கொடுத்திருந்தாலும் இந்த திருப்பங்கள் அனைத்தும் தற்செயல் நிகழ்வாகத் தோன்றி அது நன்கு திட்டமிடப்பட்ட கொலை என்று தெரிந்;தாலும் குற்றவாளிகளை போலீஸார் கண்டுபிடிக்கும் போதும் பார்வையாளர்களை உற்சாகப்படுத்த புதிதாக எதுவும் காட்டாமல் கணிக்கக்கூடிய வகையில் இயக்கியிருக்கிறார் டானா எஸ்.ஏ.
மொத்தத்தில் பிலிம் இன்டர்நேஷனல் சார்பில் டி.டி.ராஜா மற்றும் டி.ஆர். சஞ்சய் குமார் தயாரித்திருக்கும் ஹிட்லர் சர்வாதிகாரத்தை எதிர்க்கும் சாமான்யன்.