பேரன்பும் பெருங்கோபமும் சினிமா விமர்சனம் : பேரன்பும் பெருங்கோபமும் புதிய கோணத்தில் ஆணவ கொலை வலிகளுக்கு மருந்தாக மிரட்சி தரும் புரட்சி தக்க பதிலடி தரும் | ரேட்டிங்: 3/5
ஈ 5 என்டர்டெயின்மென்ட் சார்பில், தயாரிப்பாளர் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரிப்பில் இயக்குநர் தங்கர் பச்சான் வழங்கும் ‘பேரன்பும் பெருங்கோபமும்’ படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவப்பிரகாஷ்.
கதையின் நாயகனாக இயக்குநர் தங்கர் பச்சானின் மகன் விஜித் அறிமுகமாகிறார். கதாநாயகியாக ஷாலி நிவேகாஸ் மைம் கோபி, அருள்தாஸ், சுபத்ரா ராபர்ட், தீபா, கீதா கைலாசம், என்.பி.கே.எஸ்.லோகு, செழியன், வலீனா, ஹரிதா, பவா செல்லதுரை உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:- இசை – இளையராஜா, ஒளிப்பதிவாளர் – ஜே.பி.தினேஷ்குமார், படத்தொகுப்பாளர் – ராமர், கலை இயக்குனர் – சரவணன், மக்கள் தொடர்பு – ஜான்சன்பல வருடங்கள் தேனி அரசு மருத்துவமனையில் ஆண் செவிலியராக வேலைபார்த்து வருகிறார் 50 வயதுடைய ஜீவா (விஜித் பச்சன்). சுகாதாரத்துறை அமைச்சராக இருக்கும் செல்வாக்குமிக்க முத்துப்பாண்டியின் (மைம் கோபி) சொந்த தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் குழந்தை கடத்தல் பல நடப்பதாக புகார் அளிக்கப்பட, இந்த விசாரணையை மேற்கொள்ளும் போலீஸ் அதிகாரி செழியன், சந்தேகத்தில் பேரில் ஜீவா கைது செய்யப்படுகிறார். ஜீவா குற்றத்தை ஒப்புக்கொள்வதோடு, போலீசாரிடம் பல அதிர்ச்சிகரமான தகவல்களை தெரிவிக்க, குழந்தை கடத்தல் வழக்கில் பல பெரிய அரசியல் புள்ளிகளுக்கு சம்பந்தம் இருப்பதை அறிந்து, மறைவிடத்தில் ஜீவாவை விசாரிக்கின்றனர். அதன் பின் இருபந்தைந்து வருடங்களுக்கு முன் நடந்த சம்பவங்கள் ஜீவா பிறந்து வளர்ந்த கிராமத்திலிருந்து படம் ஆரம்பிக்கிறது. கிராமத்தில் ஜீவாவின் தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த நண்பனுக்கும், உயர் ஜாதி பெண்ணிற்கும் காதல் மலர்ந்து ஊரை விட்டே ஒட முற்படும் போது கிராம மக்களால் சுற்றி வளைக்கப்பட்டு, ஊரில் பெரிய அரசியல் கட்சி தலைவராக இருக்கும் முத்துப்பாண்டி, ரத்தினவேல் (அருள்தாஸ்), வீரசக்தி (என்.பி.கே.எஸ்.லோகு) அந்த நண்பரை எரித்துக் கொன்று விடுகின்றனர். காதலியை கொடுமைப்படுத்தி மனநலம் பாதித்து தெருவில் அனாதையாக விட்டுவிடுகின்றனர். இதனால் கலக்கமடையும் ஜீவாவின் தாய் தமிழ்ச்செல்வி (சுபத்ரா ராபர்ட்); நண்பனுக்கு உதவி செய்த மகனை கேரள எல்லையில் இருக்கும் மாஹே என்ற இடத்தில் படிக்க அனுப்புகிறார். அங்கே நர்ஸிங் படிப்பை தொடரும் ஜீவாவின் மீது காதல் கொள்கிறார் கேரள கிருத்துவ மதத்தைச்; சேர்ந்த சாரா (ஷாலி நிவேகாஸ்). தன் அக்கா கணவரை திருமணம் செய்து வைக்க சாராவை கட்டாயப்படுத்தும் தன் குடும்பத்தினரிடமிருந்து தப்பித்து ஜீவாவை திருமணம் செய்து கொண்டு அவரின் சொந்த கிராமத்திற்கு வருகிறார் சாரா. ஜீவாவின் தாய் இந்த கலப்பு திருமணத்தை ஏற்றுக் கொள்ளாமல் மகனையும் மருமகளையும் ஒதுக்கி வைக்கிறார். நிரந்தர அரசு வேலை விஷயமாக அடிக்கடி சென்னைக்கு வருகிறார் ஜீவா. இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் சாரா மர்மமான முறையில் கிராமத்தில் எரித்து கொல்லப்படுகிறார். இதற்கு காரணமானவர்கள் யார்? ஜீவா அவர்களை எப்படி பழி வாங்கினார்? குழந்தை கடத்தலுக்கும், இந்த சம்பவத்திற்கும் என்ன தொடர்பு? அரசியல்வாதியையும், ஜாதிக்கட்சி தலைவரையும் மனதளவில், மன உளைச்சல் ஏற்படும் வண்ணம் எப்படி ஜீவா பழி வாங்கினார்? என்பதே படத்தின் க்ளைமேக்ஸ்.
ஜீவாவாக விஜித் பச்சன் அறிமுக நாயகன் என்ற சாயலே இல்லாதவண்ணம் மூன்று வித காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்களின் கதாபாத்திர கெட்டப்பில் முதிர்ச்சியான நடிப்பை வழங்கி இருக்கிறார். காதல் காட்சிகள் மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் அமைதியான ஆர்ப்பாட்டமான நடிப்பும், ஜாதிக் கொலைகளை கண்டு பொங்கி எழுந்து தகுந்த பாடத்தை கற்பிக்க எடுக்கும் செயல் என்று அனைத்துக் காட்சிகளிலும் இறுக்கமான முகபாவத்துடன் ஸ்கோர் செய்கிறார்.
சாராவாக ஷாலி நிவேகாஸ் அழகான காதலியாக, படத்தில் ஃபிளாஷ்பேக் காட்சிகள் தான் என்றாலும் முக்கியத்துவம் வாய்ந்து, உணர்ச்சிகரமான நடிப்பில் மிளர்கிறார், இறுதிக் காட்சியில் அனைவருக்கும் சர்ப்ரைஸ் தருகிறார்.வில்லத்தனத்தில் முத்துப்பாண்டியாக மைம் கோபி, ரத்தினவேலாக அருள்தாஸ், , வீரசக்தியாக என்.பி.கே.எஸ்.லோகு, மாரியம்மாவாக தீபா, தமிழ்ச் செல்வியாக சுபத்ரா ராபர்ட் அனைவரும் மிரளும் விதத்தில் நடிப்பை வழங்கியுள்ளனர். நீதிபதி சரோஜாவாக கீதா கைலாசம், டிஎஸ்பி செழியனாக சாய் வினோத், வள்ளியாக வலீனா, மஞ்சுளா தேவியாக ஹரிதா, எழுத்தாளராக பவா செல்லதுரை ஆகியோர் சரியான தேர்வு படத்திற்கு கூடுதல் பலம்.
ஆணவ படுகொலை சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் நடக்கும் சம்பவங்களின் கதைக்களத்தில் இளையராஜாவின் இசை மற்றும் பின்னணி இசை, ஒளிப்பதிவாளர் ஜே.பி.தினேஷ்குமார், படத்தொகுப்பாளர் ராமர், சரவணனின் கலை ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் அளப்பரிய உழைப்பு படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து மேம்படுத்தியுள்ளது.பேரன்பும் பெருங்கோபமும் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவபிரகாஷ்.இன்றளவும் பல கிராமங்களில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆணவக்கொலைகள், மறைமுக ஆதரவு அளித்து அதை வைத்து அரசியல் செய்யும் கட்சிகள், பாதிக்கப்படும் காதலர்கள் என்று திரைக்கதையமைத்து அதைக் கண்டு தன் வாழ்க்கையில் நடந்த ஆணவக் கொலைக்கு எதிராக பெருங்கோபம் கொண்டு எடுக்கும் நடவடிக்கை எப்படி அரசியல்வாதிகளையும், ஜாதிக் கட்சிக்காரர்களையும் ஆட்டம் காண வைக்கிறது என்பதை நேர்த்தியான, மனதை தொடும் உணர்ச்சிகளுடன் ஃபிளாஷ்பேக், க்ளைமேக்ஸ் காட்சிகள் திருப்பங்கள் நிறைந்து சிறப்பாக கொடுத்துள்ளார் இயக்குனர் சிவபிரகாஷ்.
மொத்தத்தில் ஈ 5 எண்டர்டெயின்மென்ட் சார்பில் காமாட்சி ஜெயகிருஷ்ணன் தயாரித்திருக்கும் பேரன்பும் பெருங்கோபமும் புதிய கோணத்தில் ஆணவ கொலை வலிகளுக்கு மருந்தாக மிரட்சி தரும் புரட்சி தக்க பதிலடி தரும்.