படை தலைவன் சினிமா விமர்சனம் : | ரேட்டிங்: 2.5/5
நடிகர்கள் : சண்முக பாண்டியன் விஜயகாந்த், கஸ்தூரி ராஜா, யாமினி சந்தர், முனிஷ்காந்த், கருடன் ராம், ரிஷி, ஏ.வெங்கடேஷ், யுகி சேது, ஸ்ரீஜித் ரவி, அருள் தாஸ், லோகு என்பிகேஎஸ்
தொழில்நுட்ப கலைஞர்கள் :
எழுத்து மற்றும் இயக்கம் : யு.அன்பு
தயாரிப்பு : ஜெகநாதன் பரமசிவம்
திரையரங்கம் வெளியீடு : கேப்டன் சினி கிரியேஷன்ஸ்;
இசை : இளையராஜா
வசனம் மற்றும் திரைக்கதை : பார்த்திபன் தேசிங்கு
ஒளிப்பதிவு : எஸ்.ஆர்.சதீஷ் குமார்
எடிட்டிங் : எஸ்.பி.அஹமது
கலை இயக்குனர் : பி. ராஜு, சண்முகம்
சண்டைக்காட்சி : மகேஷ் மேத்யூ
தயாரிப்பு நிர்வாகி : வி.முத்துகுமார்
விஷுவல் எஃபெக்ட்ஸ் : சுனில்: சுனில்
ஒலி வடிவமைப்பு : ஏ.சதீஷ் குமார்
மிக்சிங் : ஆனந்த் ராமச்சந்திரன், கே.ஜெகன்
ஆடை வடிவமைப்பு : என்.லோகநாதன்
ஸ்டில்ஸ் : சக்தி பிரியன்
மக்கள் தொடர்பு : சதீஷ் (AIM)
பொள்ளாச்சி அருகே உள்ள சேத்துமடை கிராமத்தில் குயவன் தந்தை (கஸ்தூரி ராஜா), மகன் வேலு (சண்முக பாண்டியன்), மகளுடன் வசித்து வருகிறார். கூடவே 25 வருடமாக வளர்ந்து வரும் மணியன் என்ற யானையை தங்கள் வீட்டில் ஒருவராகப் பார்க்கிறார்கள். அந்த யானை, சண்முக பாண்டியனிடம் மிகுந்த பாசமாய் உள்ளது. இந்த நிலையில் அதே ஊரை சேர்ந்த லோகு, கஸ்தூரிராஜா வாங்கிய கடனுக்காக அவர் அவமானப்படுத்துகிறார். இதனால் அவரது கடனை அடைப்பதற்காக சண்முக பாண்டியன் நண்பர்கள் உதவியுடன் மணியனை வைத்து பணம் சம்பாதிக்க நினைக்கிறார். லோகுவின் சூழ்ச்சியால் ஒரு பெரிய சிக்கலில் அந்த மணியன் மாட்டிக் கொண்டு, வனத்துறையிடம் ஒப்படைக்கப்படுகிறது. வனத்துறையினரால் அங்கு மணியன் துன்புதுத்தப்படுகிறான். ஒரு கட்டத்தில் மணியனை ஒரு கும்பல் கடத்திச் சென்று விடுகிறது. அதைக் கண்டுபிடிக்க வேலு அவர் நண்பர்களுடன் செல்கிறான். அதன் பிறகு என்ன நடந்தது? அந்த யானை மணியனை ஏன் கடத்தினார்கள்? அதைக் கண்டு பிடிக்கச் செல்லும் வழியில் அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகள் என்ன, யானை மணியனை வேலு மீட்டாரா? என்பதே மீதிக்கதை.