காந்தாரா திரை விமர்சனம் : திரைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு புதுவித ஆக்ரோஷம் நிறைந்த முழுமையான தெய்வ அனுபவம் தரும்! | ரேட்டிங்: 4/5

0
368

காந்தாரா திரை விமர்சனம் : திரைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு புதுவித ஆக்ரோஷம் நிறைந்த முழுமையான தெய்வ அனுபவம் தரும்! | ரேட்டிங்: 4/5

நடிகர்கள் – கதாபாத்திரங்கள்:
ரிஷப் ஷெட்டி – காடுபெட்டு சிவா
சப்தமி கவுடா – லீலா
கிஷோர் – முரளிதர்
அச்சுயுத் குமார் – தேவேந்திர சுட்டூரு
ப்ரமோத் ஷெட்டி – சுதாகரா
ஷனில் குரு – புல்லா
பிரகாஷ் துமிநாட் – ராம்பா.
தொழில் நுட்பகலைஞர்கள்:
எழுத்து மற்றும் இயக்கம் – ரிஷப்ஷெட்டி
இசை – பி.அஜனீஷ் லோக்நாத்
ஒளிப்பதிவு – அரவிந்த் எஸ் காஷ்யப்
படத்தொகுப்பு – கே.எம் பிரகாஷ் | பிரதீக் ஷெட்டி
நிர்வாக தயாரிப்பு – கார்த்திக்
தயாரிப்பாளர் – விஜய் கிரகந்தூர்
நிறுவனம் – ஹோம்பாலே பிலிம்ஸ்
வெளியீடு – எஸ் ஆர் பிரபு – ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்.
மக்கள் தொடர்பு – யுவராஜ்

1847ஆம் ஆண்டு கர்நாடகாவின் குந்தாப்பூர் கிராமத்தில் நடக்கும் கதைக்களமாக இப்படம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியின் அரசன் அமைதி இல்லாத வாழ்க்கையோடு மகிழ்ச்சியில்லாமல் இருக்கிறார், மேலும் அவர் ஒரு காட்டின் அருகே ஒரு தெய்வத்தைக் காணும்போது, இறுதியாக அமைதியை அடைகிறார். அங்குள்ள கிராம மக்களுடன் ஒப்பந்தம் செய்து, வன நிலங்களை தெய்வத்திற்காக மாற்றிக் கொள்கிறார். கதை 1970களில் நுழைகிறது. ராஜாவின் வாரிசுகள் நிலங்களைத் திரும்பக் கோரும்போது சிக்கல் தொடங்குகிறது. ஒரு நாள் அரசனின் வாரிசு அங்கு நடக்கும் பாரம்பரிய கோலத்தில் கடவுள் வேடமிட்டவரை அவமதிக்கிறார். வன நிலம் ஒரு காலத்தில் தனது முன்னோர்களுக்குச் சொந்தமானது என அவர் கூறுகிறார். அவர் உண்மையில் கடவுள் என்றால் காட்டு என்று கேலி செய்கிறார். பிறகு கடவுள் என்று அழைக்கப்பட்டவர் காட்டுக்குள் சென்று மறைந்து விடுகிறார். இதற்குச் சில நாட்களுக்குப் பிறகு, அரசனின் வாரிசு நீதிமன்றப் படிகளில் ரத்த வெள்ளத்தில் இறந்துகிடக்கிறார். பின்னர் கதை 90களில் நுழைகிறது. அரசரின் பரம்பரையைச் சேர்ந்த கிராமத்தின் நில உரிமையாளர் (அச்யுத் குமார்) காட்டில் உள்ள மக்களுடன் நல்லுறவைப் பேணி வருகிறார். அவர் அந்த ஊர் பெரியவர். அதே கிராமத்தை சேர்ந்த சிவன் (ரிஷப் ஷெட்டி) ஒரு குறும்புக்காரன் மற்றும் ஆக்ரோஷ குணம் கொண்டவன். வேட்டையாடச் சென்று தனது நண்பர்களுடன் குடிபோதையில் சுற்றினாலும் அங்குள்ள மக்களின் பிரச்சினைகளை தீர்க்கிறார். இந்நிலையில் ஒரு நேர்மையான வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) அந்த நிலத்தில் மரம் வெட்டுதல் மற்றும் வேட்டையாடுவதைத் தடுக்க முயற்சிக்கிறார். வனப்பகுதியை ஒட்டிய கிராமம் என்பதால், அங்குள்ள மக்கள் அனைவரும் காட்டில் காணப்படும் விலங்குகளை வேட்டையாடவும், காய்கறிகள் மற்றும் பழங்களுக்காகவும் காட்டிற்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இது அவர்களின் வாழ்வின் ஒரு அங்கமாக இருக்கிறது. இந்தப் பின்னணியில், புதிதாக வந்திருக்கும் வன அதிகாரி முரளிதர் (கிஷோர்) , இனி யாரும் வனப்பகுதிக்குள் வரக்கூடாது என்றும், காட்டை சேதப்படுத்தியது கண்டறியப்பட்டால் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள்  என்று சிவனை எச்சரிக்கிறார்.  இந்த வரிசையில், சிவனுக்கும் வன அதிகாரி முரளிதருக்கும் இடையே சண்டை தொடங்குகிறது. இப்படி இருக்க, விஷ்ணுவின் வராஹ அவதாரம் சிவனின் கனவில் அவ்வப்போது வந்து தொந்தரவு செய்கிறது. ஒரு நாள் வன நிலங்கள் சட்ட விரோதமாக ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக கூறி, வன நிலங்களை எல்லை நிர்ணயம் செய்து காலி செய்யும் முயற்சியில் வன வரம்பு அலுவலர் கிஷோர் குமார் ஈடுபடுகிறார். விஷயங்களை சிக்கலாக்கும் வகையில், கிராம மக்களுக்கும் பிரச்னை ஏற்படுகிறது. சிவன் அவர்களை எதிர்க்கிறார். இந்த பின்னணியில் சிவன் மீது கொலை முயற்சி குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அதே சமயம் கோலத் திருவிழாவில் கடவுள் வேடம் அணிந்த சிவனின் தம்பி குருவா ஒரு நாள் கொல்லப்படுகிறார். இது கிராமத்தின் இருப்பையே கேள்விக்குறியாக்குகிறது. சிவனின் தம்பி குருவை கொன்றது யார்? விஷ்ணுவின் வராஹ அவதாரம் ஏன் அடிக்கடி சிவனை தொந்தரவு செய்கிறது?  வன அதிகாரியின் பிடியில் இருந்து தன்னை எப்படிக் காப்பாற்றிக் கொண்டார் என்பதுதான் காந்தாராவின் மீதிக்கதை.

சிவன் வேடத்தில் ரிஷப் ஷெட்டி முற்றிலும் மாறுபட்டு அசத்தியுள்ளார். காதல் காட்சிகள், ஆக்ஷன் காட்சிகள், உணர்ச்சிகரமான காட்சிகள் மற்றும் நகைச்சுவையான காட்சிகளிலும் தனது நடிப்பு திறமையை கச்சிதமாக வெளிப்படுத்தி ரிஷப் ஷெட்டி படத்தின் ஆன்மாவாக மாறியுள்ளார். சடங்குகளைப் பற்றி கவலைப்படாத ஒரு கவனக்குறைவான மகனாகவும், கிராமத்தின் செல்வாக்கு மிக்க நபரின் நம்பிக்கைக்குரிய நபராகவும், அப்பாவி காதலனாகவும் மாறுபாடுகளைக் காட்டிய அவர், ப்ரீ க்ளைமாக்ஸ் மற்றும் க்ளைமாக்ஸில் தனது நடிப்பை வேறு நிலைக்கு கொண்டு சென்றுள்ளார். க்ளைமாக்ஸில் அவரது நடிப்பு நிச்சயம் உங்களை அதிர்ச்சி அடையச் செய்யும். சண்டைக் காட்சிகளும், கிளைமாக்ஸ் காட்சிகளும் நம் மனதைக் கவரும். குறிப்பாக அவரை கைது செய்யும் காட்சிகள் நிச்சயமாக உங்கள் கவனத்தை ஈர்க்கும்.
இயக்குனர் ரிஷப் ஷெட்டி முக்கிய கருப்பொருளையும், முக்கிய உணர்ச்சிகளையும் மிக சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தின் முதல் பாதி முழுக்க முழுக்க ஈர்க்கிறது, இரண்டாம் பாதியில் குறிப்பாக இயக்குனர் ரிஷப் ஷெட்டி படத்தின் இறுதியில் ஒரு நல்ல இயக்குனர் பணியை செய்துள்ளார். ரிஷப் ஷெட்டி நல்ல கதைக் கருவும், நல்ல பின்னணியும் வைத்து அசுர வேகத்தில் நகரும் திரைக்கதை அமைத்து வித்தியாசமான உணர்வைத் தரும் வகையில் உருவாக்கியுள்ளார். கடைசி 20 நிமிடங்களில் கண்ணைக் கவரும் ஆக்ஷன் காட்சிகள்,  கூஸ்பம்ப்ஸ் தரும் பின்னனி இசை முக்கிய பங்கு வகிக்கிறது.
ஒரு கிராமத்து பழங்குடியினப் பெண்ணாக அரசு வேலையைப் பெற கடுமையாக உழைத்து, சொந்த கிராமத்தினரை ஆதரிப்பதா அல்லது வனத்துறையை ஆதரிப்பதா என்ற குழப்பத்திற்கு ஆளாகும் கதாபாத்திரத்தில் சப்தமி கவுடா சிறப்பாக நடித்துள்ளார்.
வனத்துறை அதிகாரி வேடத்தில் கிஷோர் நேர்மையான, தீவிரமான நடிப்பு கச்சிதம். அச்சுத் குமார், பிரமோத் ஷெட்டி, வினய் பித்தப்பா போன்றவர்கள் இந்தக் கதைக்கு அதிக முக்கியத்துவம் உள்ள நல்ல பாத்திரங்களாக கிடைத்ததோடு, தங்கள் பாத்திரங்களுக்கு முழு நீதி செய்திருக்கிறார்கள். படம் முழுக்க நகைச்சுவை நிவாரணம் தந்த துணை கதாபாத்திரங்களை மறந்துவிடக் கூடாது. அவர்கள் அனைவரும் படத்தின் வெற்றிக்கு சிறப்பான  பங்களிப்பை தந்துள்ளனர்.
பி.அஜனீஷ் லோக்நாத் இசையமைத்த பாடல்கள் சூழ்நிலை மற்றும் உணர்வுப்பூர்வமானவை.  அட்டகாசமான பின்னணி இசையை இசையமைத்து கடைசி 20 நிமிடங்களில், பார்வையாளர்களிடம் பயங்கர தாக்கத்தை ஏற்படுத்தி, கதை மற்றும் காட்சிகளை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுள்ளார்.
அஜனீஷின் பிஜிஎம் மூலம் பல காட்சிகள் அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லப்பட்டன.
காந்தாராவின் மற்றொரு முக்கிய சொத்து அதன் ஒலி வடிவமைப்பு ஆகும்.
ஒளிப்பதிவாளர் அரவிந்த் எஸ். காஷ்யப்பின் அற்புதமான பிரேம்கள், கிராமம் மற்றும் பழங்குடியினரின் சூழலையும் காடுகளின் காட்சிகளையும் இயல்பாகவும், யதார்த்தமாகவும், ஈர்க்கக்கூடியதாகவும் காட்டியது ஃப்ரேமிங்கும் ஒளியமைப்பும் பீரியட் படத்திற்கு மதிப்பு சேர்க்கிறது.
விறுவிறுப்பான மு.ஆ.பிரகாஷ் மற்றும் ப்ரதீக் ஷெட்டியின் எடிட்டிங். ஆக்ஷன் காட்சிகள் திடமானதாகவும், உயர்வாகவும் இருக்கிறது.
மொத்தத்தில் அற்புதமான வடிவமைப்பில் ஹோம்பலே பிலிம்ஸ் விஜய் கிரகந்தூர் தயாரித்துள்ள காந்தாரா ஒரு திரைப்படம் மட்டுமல்ல, முழுக்க முழுக்க  திரைப்பட ஆர்வலர்களுக்கு இது ஒரு புதுவித ஆக்ரோஷம் நிறைந்த முழுமையான தெய்வ அனுபவம் தரும்!