ஹொம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரம் ஹிர்திக் ரோஷன் நடிக்கும் புதிய பான்-இந்தியா திரைப்படம்!

0
288

இந்தியாவின் இரு மெகா சக்திகள், ஹிர்திக் ரோஷன் மற்றும் ஹொம்பாலே பிலிம்ஸ், ஒரு புதிய பான்-இந்தியா திரைப்படத்திற்காகக் கைகோர்த்துள்ளனர்!

இந்தியத் திரைத்துறையில் மிகப்பெரிய திரைப்பட தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ஹொம்பாலே பிலிம்ஸ், தனது தொடர்ச்சியான வெற்றிப்படங்களின் மூலம் புதிய அளவுகோலை நிலைநிறுத்தியுள்ளது. இந்த ஸ்டுடியோ தொடர்ச்சியாக மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ஹிட்களை வழங்கி ரசிகர்களை அசத்தி வந்துள்ளது. இப்போது இந்தியளவில் ரசிகர்கள் உற்சாகம் கொள்ளும் வகையில்  பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக, ஹொம்பாலே பிலிம்ஸ், பாலிவுட் ஸ்டார் ஹிர்திக் ரோஷனுடன் இணைந்து ஒரு புதிய திரைப்படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பே இந்தியா முழுவதும் ஹிர்திக் ரோஷனின் ரசிகர்களுக்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஆச்சரிய செய்தியாக மாறியுள்ளது.
இதைப் பற்றிக் கூறும் ஹொம்பாலே பிலிம்ஸ் நிறுவனர் விஜய் கிரகந்தூர் கூறியதாவது….
“எங்களின் இந்த  கூட்டணி மிகுந்த மகிழ்ச்சி தந்துள்ளது. ஹொம்பாலே பிலிம்ஸில், நாங்கள் மொழி எல்லைகளைக் கடந்து  மக்கள் விரும்பும்  கதைகளைச் சொல்லும் நோக்குடன் பயணிக்கிறோம். ஹிர்திக் ரோஷனுடன் கூட்டணி அமைத்திருப்பது, அந்தக் கனவுகளை நனவாக்கும் ஒரு முக்கியப் படியாகும். பிரம்மாண்டமான அளவில், மிக ஆழமும் கற்பனையும் ஒன்றிணைக்கும் ஒரு திரைப்படத்தை உருவாக்குவதே எங்கள் இலக்கு. இது மக்கள் மனங்களில் சக்திவாய்ந்ததும், நிலைத்தும் இருக்கும் ஒரு அனுபவத்தை வழங்குவதே எங்கள் நோக்கம்.”இதனைத் தொடர்ந்து நடிகர் ஹிர்திக் ரோஷன் கூறியதாவது….

“ஹொம்பாலே பிலிம்ஸ் பல தனித்துவமான கதைகளின் மூலம் தனக்கென ஒரு இடத்தை பெற்றுள்ளது. அவர்களுடன் இணைந்து ஒரு வெகு வித்தியாசமான சினிமா அனுபவத்தை வழங்கும் திரைப்படத்தில் பணியாற்ற மிக ஆவலாக உள்ளேன். நாங்கள் பெரிய திரைக்கனவுகளைக் காண்கிறோம் மற்றும் அதை நனவாக்க உறுதியாக இருப்போம். ரசிகர்களுக்கு இது புது அனுபவமாக இருக்கும்.”கடந்த சில ஆண்டுகளில், பான்-இந்தியா அளவில் பெரும் வெற்றிப் படங்களை வழங்கி, ஹொம்பாலே பிலிம்ஸ் இந்தியாவின் முன்னணி  தயாரிப்பு நிறுவனமாகப் பெயர் பெற்றுள்ளது. கேஜிஎப்: பார்ட் 1 மற்றும் 2, சலார்: பார்ட் 1 – சீஸ்‌ஃபயர், மற்றும் காந்தாரா போன்ற வெற்றிப் படங்களை வழங்கி, அவர்கள் கதைக்களத்திலும், வசூலிலும் புதிய அளவுகோலை உருவாக்கியுள்ளனர்.

மற்றொரு புறம், ஹிர்திக் ரோஷன் இந்தியாவின் மிகவும் பிரபலமான சூப்பர்ஸ்டார்களில் ஒருவர். அவரது தனித்துவமான நற்சிறப்பும், மாபெரும் திரை நேர்த்தியும், சிறந்த நடிப்பும் அவரை உயரத்தில் நிறுத்தியுள்ளன. வார் 2 மற்றும் க்ரிஷ் 4 போன்ற ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் படங்களுடன், அவர் மிக வலுவான வருங்கால திரைப்பட வரிசையைக் கொண்டிருக்கிறார்.

இப்போது ஹொம்பாலே பிலிம்ஸும் ஹிர்திக் ரோஷனும் இணைகிறார்கள் என அறிவிக்கப்பட்டதால், ரசிகர்களின் எதிர்பார்ப்பு ஒரு புதிய உச்சத்துக்கே சென்றுள்ளது!