இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மனவலிமை தன்னம்பிக்கை கருத்துகளை கொண்ட ஆங்கில கவிதை புத்தம் வெளியீடு மத்திய அமைச்சர் பங்கேற்பு!

0
240

இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மனவலிமை, தன்னம்பிக்கை கருத்துகளை கொண்ட ஆங்கில கவிதை புத்தம் வெளியீடு மத்திய அமைச்சர் பங்கேற்பு!

புதுடெல்லி: தமிழகத்தை சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித் எழுதிய மனவலிமை, தன்னம்பிக்கை கருத்துகளை கொண்ட ஆங்கில கவிதை புத்தகத்தை மத்திய வெளியிட்டனர்.

திருச்சி மாவட்டம், நவலூர் குட்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த இளம் எழுத்தாளர் ஜோசன் ரஞ்சித். இவர் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளார். அதன் தொடர்ச்சியாக மெட்டமார்போசிஸ் என்ற ஆங்கில புத்தகத்தை எழுதி வந்தார். இந்த புத்தகம் 182 கவிதைகளை கொண்டது, தன்னம்பிக்கை, இயற்கை, வாழ்க்கை,முயற்ச்சி, வெற்றி, மன வலிமை என பல மையக் கருத்துகளை கொண்டதாக இந்த புத்தகம் விளங்குகிறது.

இந்த புத்தகத்தின் வெளியீட்டு விழா புதுடெல்லியில் நடைபெற்றது. விழாவில் மத்திய அமைச்சர் சதிஷ் சந்திர தூபே, இந்திய தொழில் அதிபர் அபிஷேக் வெர்மா, உத்திர பிரதேச மாநிலத்தின் அமைச்சர் தகூர் ரகுராஜ் சிங் , நடிகை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் ஹேமா மாலினி, சுரேஸ் ரத்தன் சந்திரா ஆகியோர் பங்கேற்று புத்தகத்தை வெளியிட்டனர்.

விழாவில் பல மாநிலங்களைச் சேர்ந்த நாடளுமன்ற உறுப்பினர்கள், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், மருத்துவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

விழாவில் மத்திய அமைச்சர் சதிஷ் சந்திர தூபே பேசுகையில், மனவலிமை, தன்னம்பிக்கை கருத்துகளை கொண்ட கவிதை புத்தகம் இன்றைய இளைஞர்களுக்கு சிறந்த வழிகாட்டியகாக விளங்கும். அதுமட்டுமல்லாது வாழ்கையில் சாதிக்க துடிப்பவர்களுக்கு ஒரு கருவியாக இந்த புத்தகம் இருக்கும், என்றார்.
விழாவில், 2024 -ஆம் ஆண்டின் மிகவும் ஊக்கமளிக்கும் எழுத்தாளர்
என்ற விருதும் ஜோசன் ரஞ்சித்துக்கு  வழங்கப்பட்டது.