லவ் மேரேஜ் சினிமா விமர்சனம் :

0
474

லவ் மேரேஜ் சினிமா விமர்சனம் 😐 ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:-
விக்ரம் பிரபு – இராமச்சந்திரன்
சுஷ்மிதா பட் – அம்பிகா
மீனாட்சி தினேஷ் – ராதா
சத்யராஜ் – எம்.எல்.ஏ
ரமேஷ் திலக் – குரு​
கஜராஜ் – ராமச்சந்திரன் அப்பா
அருள்தாஸ் – ராமச்சந்திரன் மாமா
முருகானந்தம் – அம்பிகாவின் தாய்மாமன்
கோடாங்கி வடிவேல் -கல்யாண தரகர்
தொழில்நுட்ப கலைஞர்கள் :-
இயக்குநர் – சண்முக பிரியன்
ஒளிப்பதிவாளர் – மதன் கிறிஸ்டோபர்
படத்தொகுப்பாளர் – பரத் விக்ரமன்
இசை – ஷான் ரோல்டன்
பாடலாசிரியர் – மோகன் ராஜன் – ஷான் ரோல்டன்
தயாரிப்பு – அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட்
தயாரிப்பாளர்கள் – டாக்டர்.சுவேதா ஸ்ரீ – ஸ்ரீநிதி சாகர்
வெளியீடு – சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்தி வேலன்
மக்கள் தொடர்பு – யுவராஜ்

லவ் மேரேஜ் என்பது நிச்சயதார்த்தம், திருமணம் மற்றும் வழியில் உருவாகும் அல்லது முறிந்து போகும் உறவுகளுக்கு இடையிலான பல்வேறு கட்டங்களை சுற்றி எழுதப்பட்டுள்ளது. மதுரையில் உள்ள ஒரு கிராமத்தில் 33 ​வயதான ராமச்சந்திரன் என்னும் ராம் (விக்ரம் பிரபு), திருமணமாகாதவர், தனது நரை முடி மற்றும் திருமண நிராகரிப்புகளை நன்கு உணர்ந்தவர். அவர் தனது இளமைப் பருவத்தில் உள்ள அனைத்து சாத்தியமான பெண்களையும் நிராகரித்துவிட்டதால், இப்போது அவரை யாரையும் திருமணம் செய்து கொள்ள முன்வரவில்லை. ஒரு வழியாக அவருக்கு கோபிசெட்டிபாளையத்தில் ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பெண் கிடைக்க, நிச்சயதார்த்தம் செய்ய அவர் தனது குடும்பத்தினருடன் அங்கு செல்கிறார். அதைத் தொடர்ந்து அம்பிகா (சுஷ்மிதா பட்) என்னும் பெண்ணுடன் அவரது நிச்சயதார்த்தம் நடைபெறுகிறது. இருப்பினும், நிச்சயம் செய்த பின் லாக்டவுன் போடுவதால் ராமின் குடும்பத்தினர் அம்பிகாவின் வீட்டில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. லாக்டவுன் இருப்பதால் ஒரு வாரத்தில் திருமணம் செய்ய முடிவு செய்கிறார்கள். இந்நிலையில் நாயகி சுஷ்மிதா வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இதனால் ராமச்சந்திரன் குடும்பத்தினர் அம்பிகாவின் குடும்பத்தினரை இழிவாக பேசி அவமானம் படுத்தியதால் ராமச்சந்திரன் திருமணக் கனவு முட்டுக்கட்டையாக அமைந்து விடுகிறது. அதன் பிறகு என்ன நடந்தது? இறுதியில் திருமணம் கனவோடு இருக்கும் ராமச்சந்திரனுக்கு திருமணம் நடந்ததா? இல்லையா? அம்பிகா எதற்காக வீட்டை விட்டு ஓடிப் போகிறாள்? போன்ற கேள்விகளுக்கு பதில் அளிக்கிறது படத்தின் மீதிக்கதை.