சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கிழக்கு மண்டல காவல்படை டி.ஐ.ஜி. தினகரன், ஶ்ரீமதி கேசன், வர்ஷா அஸ்வானி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள மகாராஷ்டிரா பவனில் 11 வது சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. ‘ யோகா ஃபார் ஒன் எர்த், ஒன் ஹெல்த் ‘ எனும் கருப்பொருளில், மதிப்பிற்குரிய கிழக்கு மண்டல கடலோர காவல்படை டி.ஐ.ஜி. தினகரன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனரும், தலைமை செயல் அதிகாரியுமான ஶ்ரீமதி கேசன் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். Born to Win ஆராய்ச்சி அறக்கட்டளையின் நிறுவனர் வர்ஷா அஸ்வானி இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைப்பில் முக்கிய பங்கு வகித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரிக்கப்பட்ட 11 வது சர்வதேச யோகா தினம், மிகுந்த உற்சாகத்துடன் கடைபிடிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியை, நிலையான வளர்ச்சிக் கழகம், ( சஸ்டைனபில் டெவலப்மெண்ட் கவுன்சில்) மற்றும் (Born to Win) பார்ன் டு வின் ரிசர்ச் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் ஆகியவை, ரோட்டரி கிளப்பின் ஆதரவோடு ஏற்பாடு செய்திருந்தன.

இந்தியாவின் ஆதிகால யோகா பயிற்சி மூலம் நல்ல ஆரோக்கியம் மற்றும் ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வை பரப்புவதை இந்த நிகழ்வு நோக்கமாகக் கொண்டிருந்தது.

இந்த யோகா தினத்தில், SOUL AND BODY – யோகா பயிற்சி மையத்தைச் சேர்ந்த மோனா பாஃப்னா, தலைமையில் யோகா அமர்வுகள் நடைபெற்றன. அனைத்து வயதினரிடையேயும் யோகா மற்றும் ஆரோக்கியத்தை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு பான்-இந்தியா யோகா போட்டியும் இந்த நிகழ்ச்சியில் நடத்தப்பட்டது.