கட்ஸ் சினிமா விமர்சனம் : கட்ஸ் மண்ணையும், மொழியையும் காக்க எதிரிகளை துவம்சம் செய்யும் துணிச்சலான பாதுகாவலன் | ரேட்டிங்: 2.5/5
ஓ பி ஆர் பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கும் கட்ஸ் படத்தை எழுதி இயக்கியவர் ரங்கராஜ்.
இதில் ரங்கராஜ் – ரங்கராஜ் மற்றும் பெத்தனசாமி, ஸ்ருதி நாராயணன் – கணவதியம்மாள், நான்சி – அனு, டெல்லி கணேஷ் – கரீம் பாய், சாய் தீனா – பாண்டியன், பிர்லா போஸ் – தாமஸ், ஸ்ரீலேகா – பெத்தனசாமி அம்மா, அறந்தாங்கி நிஷா – மகாலட்சுமி, பிரவீன் மஞ்ச்ரேக்கர் – வில்லன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள் :-ஒளிப்பதிவு : மனோஜ் , இசை : ஜோஸ் பிராங்க்ளின் , எடிட்டர்: ரஞ்சித், ஸ்டண்ட்: ‘செயல்” பிரகாஷ்,மக்கள் தொடர்பு : நிகில் முருகன்.
1985 ஆம் ஆண்டு காலகட்டத்தில் கதைக்களம் தொடங்குகிறது. பெத்தனசாமி (ரங்கராஜ்) தனது பிரசவ வலியால் துடிக்கும் கர்ப்பிணி மனைவி கணவதியம்மாளை (ஸ்ருதி நாராயணன்) நள்ளிரவில் ஒரு ஆட்டோவில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். அப்போது பெத்தனசாமி கொலைவெறி கொண்ட மர்ம மனிதர்களால் தாக்கப்பட, அவர் தனது மனைவியை காப்பாற்றி அருகிலுள்ள ஒரு மருத்துவச்சியிடம் அழைத்துச் செல்கிறார். அங்கு, மனைவிக்கு ஆண் குழந்தை பிறக்க, அதனையறிந்த பின் தாக்குதலால் உயிருக்கு போராடும் பெத்தனசாமி இறந்து விடுகிறார். விதவையான மனைவி கணவதி மீன் விற்று தனது குழந்தையை வளர்க்கும் போது மக்களிடமிருந்து பணம் பறிக்கும் போலீஸை துணிச்சலுடன் எதிர்க்கிறார். போலீஸ் அவளை அடித்து அவமானப்படுத்த அதனால் கோபமடையும் கணவதி போலீஸ்காரரைக் கொலை செய்யும் போது குத்துபட்டு இறந்து விடுகிறார். இளம் வயதிலேயே தனது தாயையும் தந்தையையும் இழந்த ரங்கராஜ் (ரங்கராஜ்), தனது தாயின் விருப்பப்படி நேர்மையான காவல் அதிகாரியாகி, மக்களுக்கு நல்லது செய்கிறார். அனாதையான அனுவை( நான்சி) காதலித்து திருமணம் செய்து கொண்டு, அனாதை பெண் குழந்தையையும் தத்தெடுத்து வளர்த்து மகிழ்ச்சியோடு வாழ்ந்து வருகிறார்.ஆனால் அவரது நேர்மைக்கு பல வழிகளில் தொடர்ந்து சோதனைகள் ஏற்படுகிறது.அவரது மனைவி திடீரென்று கொடூரமாக கொலை செய்யப்படுகிறார். காதல் மனைவியின் மரணம் பெரும் மனஉளைச்சலை ஏற்படுத்தி பித்து பிடித்தவர் போல் இருக்கிறார் ரங்கராஜ்;.அதன் பின் மனைவியை கொன்றது யார் என்ற உண்மை தெரிய வருகிறது. இறுதியில் ரங்கராஜ் கொலையாளியை கண்டுபிடித்;தாரா? மனைவியை கொலை செய்ய காரணம் என்ன? கொலையாளிக்கும் தனது தந்தை பெத்தனசாமிக்கும் இருந்த முன்விரோதம் என்ன? கொலையாளிக்கு எப்படி தண்டனை கொடுத்தார்? ரங்கராஜ் எதிரிகளிடமிருந்து தன் மகளை காப்பாற்ற முடிந்ததா? என்பதே படத்தில் தந்தையின் ஃபிளாஷ்பேக் காட்சிகளுடன் முடியும் க்ளைமேகஸ்.
கிராமத்து விவசாயி தந்தையாக பெத்தனசாமி மற்றும் மகன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரங்கராஜ் என முதல் படத்திலேயே இரு வேறு கெட்டப்களில் இரட்டை குழல் துப்பாக்கி போல் யதார்த்தமான நடிப்பில் கவர்கிறார்.தந்தையின் முரட்டுத்தனத்தையும், மகனின் அதிகார தோரணையையும் வௌ;வேறு காலகட்டத்திற்கேற்றவாறு பிரதிபலித்துள்ளார். மனைவியிடம் காட்டும் காதல், மகளிடம் காட்டும் பாசம், சக காவலர்களிடம் காட்டும் பரிவு, அநியாயத்தை தட்டிக் கேட்கும் பண்பு, அதனால் ஏற்படும் விபரீதம், பழிவாங்குதல் என்று அனைத்து காட்சிகளுக்கும் தன்னுடைய நடிப்பால் வலு சேர்த்துள்ளார்.
பெத்தனசாமி கர்ப்பிணி மனைவியாக ஸ்ருதி நாராயணன் சில காட்சிகள் தான் என்றாலும் உணர்ச்சிகள் நிறைந்து நிறைவாக செய்துள்ளார். போலீஸை எதிர்க்கும் போது துணிச்சலான பெண்ணாக, தைரியத்துடன் பழி வாங்கும் காட்சிகளில் மிளிர்கிறார்.
மகன் இன்ஸ்பெக்டர் ரங்கராஜின் காதல் மனைவி நான்ஸியாக அழகு பதுமையாக வந்து பின்னர் கொலை செய்யப்படும் போது பரிதாபத்தை ஏற்படுத்துகிறார்.
பிரவீன் மஞ்ச்ரேக்கர் வில்லனாக மிரட்டியுள்ளார். மறைந்த குணச்சித்திர நடிகர் டெல்லி கணேஷ், சாய் தீனா, பிர்லா போஸ், ஸ்ரீலேகா , அறந்தாங்கி நிஷா உட்பட மற்றும் பலர் துணை கதாபாத்திரங்களாக வந்து போகின்றனர்.ஒளிப்பதிவு : மனோஜ் , இசை : ஜோஸ் பிராங்க்ளின் , எடிட்டர்: ரஞ்சித், ஸ்டண்ட்: ‘செயல்” பிரகாஷ் ஆகிய தொழில்நுட்ப கலைஞர்களின் பணி இரு வேறு காலகட்டத்திற்கேற்ற காட்சிகளுக்கும், ஆக்ஷன் களத்திற்கும் தகுந்த செயல்திறனை கொடுத்து சிறப்பித்திருக்கின்றனர்.
கிராமத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களால் விவசாயத்திற்கு ஏற்படும் பாதிப்பு, விவசாய நிலங்களில் மாசுபாடு,அதை எதிர்க்கும் கிராமத்து இளைஞனுக்கு ஏற்படும் அவல நிலை, அதனால் குடும்பத்திற்கு ஏற்படும் சோதனை, அனாதை மகன் திறமையால் காவல் அதிகாரியாக, நடக்கும் திருநங்கை கொலை, விசாரிக்கும் அதிகாரிக்கு ஏற்படும் இழப்பு, மகளை காப்பாற்ற எடுக்கும் முடிவுடன் கலந்து வில்லன் தந்தையின் ஃபிளாஷ்பேக் காட்சிகள் என்று படம் முழுவதும் பல தரப்பட்ட சமூக அக்கறை கலந்த கோணத்துடன் கதை பயணிக்க, நகரத்திற்கும் கிராமத்திற்கும் தாவும் காட்சிகளில் தெளிவின்மை பல வழிகளில ;அலைபாயாமல் ஏதாவது ஒரு சமூக கருத்தை எடுத்து இன்னும் சுவாரஸ்யத்துடன் திரைக்கதையமைத்திருந்தால் பேசப்பட்டிருக்கும். இருந்தாலும் கட்ஸ் படத்தை எழுதி இயக்கி இரட்டை வேடத்தில் நடித்திருக்கும் ரங்கராஜின் கடும் முயற்சிக்கும், உழைப்பிற்கும் பாராட்டுக்கள்.
மொத்தத்தில் ஓ.பி.ஆர்.பி புரொடக்ஷன்ஸ் சார்பில் ஜெயபாரதி ரங்கராஜ் தயாரித்திருக்கும் கட்ஸ் மண்ணையும், மொழியையும் காக்க எதிரிகளை துவம்சம் செய்யும் துணிச்சலான பாதுகாவலன்.