வல்லமை சினிமா விமர்சனம் : | ரேட்டிங்: 3/5

0
263

வல்லமை சினிமா விமர்சனம் : | ரேட்டிங்: 3/5

நடிகர்கள்:
பிரேம்கி – சரவணன் (தந்தை)
திவதர்ஷினி – பூமிகா (மகள்)
தீபா சங்கர் – (டாக்டர்)​
வழக்கு என் முத்துராமன் – (காவல் ஆய்வாளர்)
சி.ஆர்.ரஜித் – சக்கரவர்த்தி (வில்லன்)
சூப்பர்குட் சுப்ரமணி – (போலீஸ் கான்ஸ்டபிள்)
சுப்பிரமணியன் மாதவன் – (வில்லன் டிரைவர்)
விது – பாபு (பெட்ரோல் திருடன்)
போராளி திலீபன் – சிவகுமார் (பள்ளி ப்யூன்)

படக்குழு
தயாரிப்பு பேனர்: பேட்டிலர்ஸ் சினிமா
எழுத்து – பாடல்கள் – தயாரிப்பு – இயக்கம் – கருப்பையா முருகன்
இசையமைப்பாளர்: ஜி.கே.வி
ஒளிப்பதிவு இயக்குனர்: சூரஜ் நல்லுசாமி
எடிட்டர்: சி கணேஷ் குமார்
கலை இயக்குனர்: எஸ்.கே. அஜய்
மக்கள் தொடர்பு : நிகில்முருகன்

விவசாயி சரவணன் (பிரேம்ஜி) தனது காதல் மனைவி ஒரு அழகான பெண் குழந்தையைப் பெற்றெடுத்த சில வருடங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக இறந்துவிடுகிறார். மனைவியின் மரணத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அவர், கேட்கும் திறனை இழக்கிறார். அதனால் அவருக்கு ஒரு காது கேட்கும் கருவியை பொருத்தி கொள்கிறார். தனது மகள் பூமிகவை (திவதர்ஷினி) நன்றாக படிக்க வைத்து ஆளாக்க வேண்டும் என்பதற்காக கிராமத்தை விட்டு, சென்னைக்கு வருகிறார். ஒரு ஆட்டோ ஓட்டுநரின் உதவியுடன் அவர்கள் ஒரு வாடகை வீட்டில் குடியேறுகின்றனர். சென்னையில், சினிமா போஸ்டர்களை ஒட்டி பிழைப்பு நடத்தி தனது அன்பு மகளின் பள்ளிப் படிப்பை ஆதரித்து மகிழ்ச்சியுடன் வாழ்கிறார். இந்நிலையில், வழக்கம் போல் பள்ளியில் இருந்து மகளை வீட்டிற்கு அழைத்து வரும் போது, தனக்கு பிறப்புறுப்பில் ரத்தம் வந்து அந்த இடத்தில் வலி இருப்பதாக தந்தையிடம் கூற, மகளை உடனே மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார் பிரேம்ஜி. மகள் பூப்பெய்து விட்டாள், தன் மகளை எப்படி பார்த்துக்கொள்ள வேண்டும் என மருத்துவரிடம் (தீபா சங்கர்) ஆலோசனை கேட்கிறார் தந்தை. அங்கு, மகளை சோதித்து பார்த்த மருத்துவர் அந்த குழந்தை அவருக்கே தெரியாமல் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு இருப்பது தெரிய வருகிறது. இதனால், அதிர்ச்சி அடைந்து உடைந்து போகிறார் சரவணன். தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று அவள் தன் தந்தையிடம் கூறுகிறாள், எனவே அந்தக் கொடூரமான மனிதனைக் கண்டுபிடித்துத் கொல்வதன் மூலம் மட்டும் தான் தனக்கு உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் ஏற்பட்ட காயம் ஆறும் என்று அவள் நினைக்கிறாள். அந்த காமக் கொடூரன் யார்? அவனை எப்படிக் கண்டுபிடித்து கொல்கிறார்கள் என்பது படத்தின் மீதிக்கதை.