சென்னையில் நடைபெற்று வரும் சபா கிளப் சாம்பியன்ஷிப் போட்டியில் பூட்டானை வீழ்த்தியது தமிழ்நாடு. மற்றொரு போட்டியில் டி ரேக்ஸ் அணியை வீழ்த்தி கொழும்பு அணி வெற்றி
தெற்காசிய கூடைபந்து சங்கம் நடத்தும் சபா கிளப் சாம்பியன்ஷிப் 2025 கூடைபந்து போட்டி சென்னை வேப்பேரியில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நேற்று தொடங்கியது. வருகின்ற ஏழாம் தேதி வரை நடைபெறும் இந்த தொடர் லீக் மற்றும் நாக் அவுட் முறையில் போட்டிகள் நடைபெற்று வருகிறது.
இதில் தமிழ்நாடு பூட்டான்,இலங்கை,நேபால் மற்றும் மாலத்தீவு என மொத்தம் ஐந்து அணிகள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர்.
இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் கொழும்பு பிசி அணியும் டி ரேக்ஸ் அணியும் மோதின.இதில் 79-74 என்ற புள்ளி கணக்கில் கொழும்பு அணி வெற்றி பெற்றது.
இதனை தொடர்ந்து நடைபெற்ற போட்டியில் தமிழ்நாடு பூட்டான் அணிகள் மோதின. இதில் 107-41 என்ற புள்ளி கணக்கில் தமிழ்நாடு அணி வெற்றி பெற்றது.