நீர்வளத்துறை மானியக் கோரிக்கை : 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் துரைமுருகன்!
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இன்று நீர்வளத்துறை மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில் அமைச்சர் துரைமுருகன் 18 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
அதன் விவரம் வருமாறு:-
1.தமிழ்நாட்டின் நீர்வளங்களைப் பாதுகாத்து மேம்படுத்தும் பொருட்டு உருவாக்கப்பட்ட நிர்வளத்துறைக்கு சென்னையில் நவீன வசதிகளுடன் கூடிய ஒருங்கிணைந்த கூடுதல் அலுவலகம் கட்டடம் அமைக்கப்படும்.
2. 15 மாவட்டங்களில், 21 இடங்களில் தடுப்பணைகள் அமைக்கும் பணி ரூ.374 கோடியே 95 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
3. திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, மதுரை, இராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், விருதுநகர், தூத்துக்குடி ஆகிய 8 மாவட்டங்களில் 9 இடங்களில் ரூ.184 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் அணைக்கட்டுகள் அமைக்கும் பணி மேற்கொள்ளப்படும்.
4. சிவகங்கை, தஞ்சாவூர், திருப்பூர், திருச்சிராப்பள்ளி ஆகிய 4 மாவட்டங்களில் 4 இடங்களில் ஆறுகளின் குறுக்கே புதிய நீரொழுங்கிகள் அமைக்கும் பணி ரூ.6 கோடியே 4 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
5. மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கடைமடை நீரொழுங்கி அமைக்கும் பணி ரூ.10 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
6. மயிலாடுதுறை மற்றும் திருச்சி மாவட்டங்களில் 2 இடங்களில் படுக்கை அணை மற்று தள மட்டச் சுவர் அமைக்கும் பணி ரூ.3 கோடியே 57 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
7.மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரு கீழ்க்குமிழி அமைக்கும் பணி ரூ.4 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
8.பாசன நிலங்களை எளிதில் சென்றடைய ஆறுகளின் குறுக்கே 8 மாவட்டங்களில் 17 இடங்களில், பாலங்கள் மற்றும் தரை பாலங்கள் அமைக்கும் பணி ரூ.130 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
9.ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் முன்னாள் ஜமீன் கண்மாய்களான 14 குறு பாசன காண்மாய்களை தரப்படுத்தும் பணி ரூ.9 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
10. கன்னியாகுமரி மற்றும் மயிலாடுதுறை மாவட்டங்களில் 5 இடங்களில் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணி மற்றும் கடற்கரை பாதுகாப்புப் பணிகளுக்கான கடலோர ஒழுங்குமுறை மண்டல அனுமதி பெறுவதற்கான முதற்கட்ட பணிகள் ரூ.1 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
11.35 மாவட்டங்களில் பழுதடைந்துள்ள 149 பாசன அமைப்புகளில் புனரமைப்பு, மறுசீரமைப்பு மற்றும் மறு கட்டுமானம் செய்யும் பணிகள் ரூ.722 கோடியே 55 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
12. அணைகள், அணை பகுதிகளில் உள்ள கட்டுமானங்களைப் பழுதுப் பார்த்தல், பராமரித்தல், புதுப்பித்தல் பணிகள் மற்றம் அதன் தொடர்புடைய உபகரணங்கள் கொள்முதல் செய்யும் பணிகள் 6 மாவட்டங்களில் 13 இடங்களில் ரூ.19 கோடியே 80 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
13. அணைகள் மற்றும் கதவணைகளின் கதவுகளைப் பழுதுபார்த்தல், அணையின் பிற பழுதுகளைச் சரிபார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் 11 மாவட்டங்களில் 16 இடங்களில் ரூ.149 கோடியே 9 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
14.11 மாவட்டங்களில் 48 இடங்களில் நீரொழுங்கிகள் மற்றும் மதகுகளில் உள்ள கதவுகளைப் பழுதுப்பார்த்தல் மற்றும் பராமரித்தல் பணிகள் ரூ.21 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
15. 7 மாவட்டங்களில் 11 இடங்களில் வெள்ளத் தணிப்புப் பணிகள் ரூ.131 கோடியே 28 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
16. செயற்கை முறையில் நிலத்தடி நீர் செறிவூட்டும் ஆழ்ளை கிணறுகள் அமைக்கும் பணி ரூ.6 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
17. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், பெஞ்சல் புயலினால் பாதிக்கப்பட்ட திருக்கோவிலூர் அணைக்கட்டினைப் புனரமைத்து சீரமைக்கும் பணி ரூ.130 கோடியில் மேற்கொள்ளப்படும்.
18. சென்னை மற்றும் அதன் புற மாவட்டங்களான திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் தீவிர வெள்ள தணிப்புக்கான ஒருங்கிணைந்த 12 வெள்ள மேலாண்மை பணிகள் ரூ.338 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.