டிமான்டி காலனி 2 விமர்சனம் : டிமான்டி காலனி -2 சஸ்பென்ஸ் கலந்த சிலிர்ப்பான அனுபவம் | ரேட்டிங்: 3/5

0
354

டிமான்டி காலனி 2 விமர்சனம் : டிமான்டி காலனி -2 சஸ்பென்ஸ் கலந்த சிலிர்ப்பான அனுபவம் | ரேட்டிங்: 3/5

பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்  சார்பில் பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரித்து ரெட் ஜெயண்ட் வெளியீட்டில் வந்துள்ள டிமான்டி காலனி 2 படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் அஜய் ஆர் ஞானமுத்து

இதில் ஸ்ரீனி மற்றும் ரகுவாக அருள்நிதி, டெபியாக பிரியா பவானிசங்கர், டிமான்டேயாக ஆண்டி ஜாஸ்கெலைனன், தாவோஷியாக டிசெரிங் டோர்ஜி, ரிச்சர்டாக அருண் பாண்டியன், தயாளனாக முத்துக்குமார், அதிதியாக மீனாட்சி கோவிந்தராஜன், சாமாக சர்ஜனோ காலிட் ,ஐஸ்வர்யாவாக அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில்நுட்ப கலைஞர்கள்:- எழுத்தாளர்கள் – அஜய் ஆர் ஞானமுத்து, வெங்கடேஷ், ராஜவேல், ஒளிப்பதிவாளர்- ஹரிஷ் கண்ணன், இசை – சாம் சிஎஸ் , எடிட்டர் – குமரேஷ், பிஆர்ஓ – சுரேஷ் சந்திரா, யுவராஜ்

டிமான்டி காலனியின் முதல் பாகத்துக்கு ஆறு வருடங்களுக்கு முன்பு நடக்கும் கதைக்களத்தில் ஒரு பெரிய மேல் தள அடுக்குமாடி குடியிருப்பில் டெர்பியின் (பிரியா பவானி ஷங்கர்) புற்றுநொய் பாதித்த காதல் கணவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொள்கிறார். அவருடன் இருந்த நண்பர்களும் கிழே குதித்து தற்கொலை செய்துகொள்கிறார்கள். ஆறு வருடங்களுக்குப் பிறகும் டெபி தன் கணவரை மறக்க முடியாமல் தவித்து வருகிறார். முன்னர் சேமித்து வைத்த கணவரின் விந்தனுவை பயன்படுத்தி ஐவிஎஃப் மூலம் கருத்தரிக்க முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தன் கணவர் ஏதோ சொல்ல முயற்சிக்கிறார் என்பதை உணரும் டெபி சீனத் துறவி ஒருவரின் உதவியுடன் கணவரின் ஆவியிடம் பேச முயல்கிறார். இந்த ஆபத்தான முயற்சியில் கணவரிடம் செல்வதற்கு பதில் டெபியை முதல் பாகத்தின் நாயகன் சீனிவாசனின் (அருள்நிதி) கதையோடு இணைத்துவிடுகிறது. சீனிவாசன் முதல் பாகத்தில் இறந்துவிட அவரை உயிருடன் மீட்பதற்கான வாய்ப்பு ஒன்று உருவாவதும் இரட்டையர்களில் ரகு (அருள்நிதி) என்ற சகோதரன் உயிருடன் இருப்பது தெரிய வருகிறது. ரகு தந்தையின் இறப்பிற்கு பிறகு சொத்துக்களை அபகரிக்க திட்டம் போடுகிறார். தந்தையின் இரண்டாவது மனைவி மற்றும் மகளும் சொத்தில் பங்கு கேட்கின்றனர். இதனிடையே கோமாவில் இருக்கும் சீனிவாசனை கருணை கொலை செய்ய நீதிமன்றத்தில் வழக்கு போடுகிறார். இந்நிலையில் இரட்டையர்கள் என்பதால் சீனிவாசனை கொன்றால் ரகுவும் இறப்பார் என்பதை டெபி மூலம் அறிந்து கொள்கிறார் ரகு. டெபி – ரகு கூட்டணி, சீனத் துறவி மற்றும் நண்பர்கள் உதவியுடன் துரத்தும் ஆபத்திலிருந்து தப்பித்தார்களா? இறுதியில் அனைவரும் இறந்தார்களா? என்பதே க்ளைமேக்ஸ்.

ஸ்ரீனி(சீனிவாசன்) மற்றும் ரகுவாக அருள்நிதி இதில் ஸ்ரீனி கோமா நிலையில் இருப்பதால் அதிகம் வேலை இல்லை, ரகுவின் கதாபாத்திரம் தான் படத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. நெகடிவ்வாக தெரிய ஆரம்பிக்கும் ரகுவின் செயல் பின்னர் குணம் மாறுவதும், டெபியின் ஆலொசனைப்படி தப்பிக்க நினைப்பதும், பின்னர் மாட்டிக் கொண்டு பயத்தில் உயிருக்கு போராடும் இடங்களில் தேர்ந்த நடிப்பை வழங்கியுள்ளார்.

டெபியாக பிரியா பவானிசங்கர் படம் முழுவதும் வந்து அனைத்து காட்சிகளிலும் அதிக சிரத்தையோடு நடித்துள்ளதற்கு பாராட்டுக்கள். அழுகை, கோபம், பயம் என்று உணர்ச்சிகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார்.

டிமான்டியாக ஆண்டி ஜாஸ்கெலைனன், தாவோஷியாக டிசெரிங் டோர்ஜி, ரிச்சர்டாக அருண் பாண்டியன், தயாளனாக முத்துக்குமார், அதிதியாக மீனாட்சி கோவிந்தராஜன், சாமாக சர்ஜனோ காலிட்,ஐஸ்வர்யாவாக அர்ச்சனா ரவிச்சந்திரன் ஆகியோரின் பங்களிப்பு படத்திற்கு உயிர்நாடி.

ஒளிப்பதிவாளர்- ஹரிஷ் கண்ணன் காட்சிக் கோணங்கள் படத்திற்கேற்ற திகிலை அதிகரிக்க என்ன செய்ய முடியுமோ அத்தனையும் காட்ட முயற்சி செய்துள்ளார்.

சாம் சிஎஸ் பின்னணி இசை ஆரம்பம் முதல் இறுதி வரை மிரட்டலுடன் கொடுத்துள்ளார்.

எடிட்டர் – குமரேஷ் கச்சிதமாக படத்தொகுப்பை செய்துள்ளார்.

டிமான்டி காலனி – 2 படத்தில் ஜூன் மாதம் ஆறாம் தேதி ஆறு ஆண்டு கால இடைவேளியில் முன்னும் பின்னுமாக 2009, 2015, 2021 என்று காட்சிகள் நகர, இதில் ஆவியுலகம், சீன துறவி பூஜை, 666, மர்ம புத்தகம், காணாமல் போன தங்க செயின் போன்றவை வழக்கத்திற்கு மாறாக இருந்து சுவாரஸ்யத்தை கூட்டி திகில் படத்திற்கான அத்தனை அம்சங்களையும் முயற்சிகள் செய்து இணைத்து முதல் பாகத்தின்; ப்ரீக்யுல்லாக இயக்கியுள்ளார் அஜய் ஆர் ஞானமுத்து.

மொத்தத்தில் பிடிஜி யுனிவர்சல், ஞானமுத்து பட்டரை, ஒயிட்நைட்ஸ் எண்டர்டெயின்மென்ட்  சார்பில் பாபி பாலச்சந்திரன், விஜய் சுப்ரமணியன், ஆர்.சி.ராஜ்குமார் தயாரித்திருக்கும் டிமான்டி காலனி -2 சஸ்பென்ஸ் கலந்த சிலிர்ப்பான அனுபவம்.