புதிய இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார்

0
115

புதிய இந்திய கடற்படை தளபதி ஹரிகுமார்

புதுடில்லி: இந்திய கடற்படை தளபதியாக வைஸ் அட்மிரல் ஹரிகுமார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் வரும் 30ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.

தற்போது தளபதியாக இருக்கும் கரம்பீர் சிங், வரும் நவ.,30ம் தேதியுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, கடற்படைக்கு புதிய தளபதியாக ஹரிகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தற்போது இவர், மேற்கு பிராந்திய தலைவராக உள்ளார். கடந்த 1983ல் கடற்படையில் இணைந்த அவர், பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். ஐஎன்எஸ் விராட், ஐஎன்எஸ் ரன்வீர் ஆகிய போர்க்கப்பல்களிலும் பணிபுரிந்துள்ளார்.