பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

0
114

பாலிவுட் நடிகர் திலீப் குமார் காலமானார்

வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் திலீம் குமாரின் உயிர் இன்று பிரிந்தது. 1922-இல் பாகிஸ்தானின் பெஷாவரில் பிறந்த திலீப்குமாரின் இயற்பெயர் முகமது யூசுப் கான். இந்திய திரையுலகின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை 1994-இல் பெற்றவர் திலீப் குமார்.

நடிகர் திலீப்குமார், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார். 1944-இல் திரையுலகில் கால் பதித்த திலீப் குமார் 65-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். மொகல்-இ-ஆசம், தேவதாஸ், மதுமதி உட்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்திருக்கிறார் திலீப்குமார்.