குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி! புதுச்சேரி அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு!! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல்!!!

0
192

குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 நிதியுதவி! புதுச்சேரி அரசின் அறிவிப்புக்கு மக்கள் நீதி மய்யம் வரவேற்பு!! தமிழகத்திலும் செயல்படுத்த வலியுறுத்தல்!!!

குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தெரிவித்துள்ளது.

சென்னை, புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடரில் 2022-23 ஆம் நிதி ஆண்டிற்கான ரூ. 10,696 கோடிக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சரும் ,முதல்-அமைச்சருமான ரங்கசாமி நேற்று தாக்கல் செய்தார். புதுச்சேரி பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியான நிலையில், எந்தவிதமான அரசு உதவி தொகையும் பெறாத 21 முதல் 57 வயது வரையிலான வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் குடும்ப தலைவிகளுக்கு நிதியுதவி திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல என்று மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் தனது டுவிட்டரில், “இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் ஊதியம் என்ற திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென நாட்டிலேயே முதன்முதலில் குரல் கொடுத்தவர் மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன். இந்த திட்டத்தை அவர் தொடர்ந்து வலியுறுத்தியதையடுத்து, அம்மாநில முதல்-அமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளதை மக்கள் நீதி மய்யம் வரவேற்பதுடன், புதுச்சேரி அரசுக்கு வாழ்த்துகளைத் தெரிவிக்கிறது.

அதேசமயம், இந்த திட்டத்தை தேர்தல் வாக்குறுதியாக அளித்து தமிழகத்தில் ஆட்சியைப் பிடித்த திமுக, இன்னமும் பிடிகொடுக்காமல் உள்ளது ஏற்புடையதல்ல. இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் நிதியுதவி வழங்கும் திட்டத்தை தமிழக அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்” என்று அதில் பதிவிடப்பட்டுள்ளது.

https://twitter.com/maiamofficial/status/1561962375678267393