இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி

0
288

இன்று மாலை நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் பிரதமர் மோடி

புதுடெல்லி: கடந்த 34 ஆண்டுகளுக்குப் பின்னர், கல்விக் கொள்கையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளது. மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கைக்கு, ஆதரவும், எதிர்ப்பும் எழுந்துள்ளன.

இந்நிலையில், பிரதமர் மோடி இன்று மாலை 4.30 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்ற உள்ளார். புதிய கல்விக் கொள்கையில் இடம் பெற்றுள்ள சிறப்பு அம்சங்கள் குறித்து அவர் விளக்க உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த உரையில் கொரோனா பாதிப்பு, ரபேல் போர் விமானங்கள் வருகை உள்ளிட்டவை குறித்தும் குறிப்பிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.