இந்து மதம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார் : திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது

0
339

இந்து மதம் குறித்து அவதூறு பரப்புவதாக புகார் : திரைப்பட இயக்குநர் வேலுபிரபாகரன் கைது

பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜி என்பவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்றை கொடுத்தார். அதில், யு-டியூப் சேனலில் திரைப்பட இயக்குனர் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனத் தெரிவித்திருந்தார்.

இந்த புகார் குறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வேலு பிரபாகரன் மீது 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் இயக்குநர் வேலு பிரபாகரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.