ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது – பள்ளிக்கல்வித்துறை
சென்னை,
ஆன் லைன் வகுப்புகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழக கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
அதில்,
* ஆகஸ்ட் 3-ம் தேதி முதல் தனியார் தொலைகாட்சிகள் மூலம் பாடங்கள் ஒளிபரப்பப்படும்.
* தொலைக்காட்சிகள் மூலமாக மாணவர்களுக்கு பாடங்களை நடத்துவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
* முழுமையான இணையவழி, பகுதியளவு இணையவழி,ஆப்லைன் மோடு ஆகிய முறைகளில் வகுப்புகள் நடத்தலாம்.
* ஒவ்வொரு வகுப்புக்கும் இடையே 10 முதல் 15 நிமிடங்கள் இடைவேளை இருக்க வேண்டும்.
* எல்.கே.ஜி,யு.கே.ஜி வகுப்பு குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்பு நடத்தக்கூடாது.
* 1-8 வகுப்பு வரை 1.30 மணி நேரம், 9-12 ஆம் வகுப்பு 3 மணி நேரம் மட்டுமே வகுப்பு நடத்தலாம்.
* ஒவ்வொரு வகுப்பும் 30 முதல் 45 நிமிடங்கள் தான் இருக்க வேண்டும்.
* 9ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு ஒரு நாளுக்கு அதிகபட்சம் 3 மணி நேரம்தான் இணையவழி வகுப்பு நடத்த வேண்டும்.
* ஒவ்வொரு ஆசிரியரும் 6 வகுப்புகளை மட்டுமே எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.