Tamil Nadu Assembly Election Results 2021: வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள், ஊழியர்கள் 911 பேருக்கு கொரோனா பரிசோதனை

0
164

Tamil Nadu Assembly Election Results 2021: வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள், ஊழியர்கள் 911 பேருக்கு கொரோனா பரிசோதனை

சென்னை: சட்டசபை தேர்தல் ஓட்டுப்பதிவு கடந்த மாதம் 6-ந் தேதி நடைபெற்றது. சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குகளை கொண்ட எந்திரங்கள் ராணிமேரி கல்லூரி, லயோலா கல்லூரி, அண்ணா பல்கலைக்கழகம் ஆகிய 3 இடங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு உள்ளன.

இந்த மையங்களில் நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. அதில் பங்கேற்கும் அதிகாரிகள், ஊழியர்களுக்கான 2-ம் கட்ட பயிற்சி வகுப்பு மாநகராட்சி, ரிப்பன் மாளிகை வளாகத்தில் நடந்தது.

இந்த முகாமில் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல்படி, வாக்கு எண்ணும் மைய அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் 911 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

மேலும் 155 பேருக்கு 2-வது தவணை தடுப்பூசி போடப்பட்டது. வாக்கு எண்ணும் இடத்தில் செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்களுக்காக சிறப்பு முகாம் நடத்தப்பட்டு அதில் 153 பேர் பரிசோதனை செய்து கொண்டனர்.

தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி வாக்கு எண்ணும் மையங்களுக்கு செல்லும் அனைவரும் கொரோனா தடுப்பூசி 2-வது தவணை செலுத்தியதற்கான சான்றிதழ் அல்லது ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொண்டு கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் இருந்தால் மட்டுமே வாக்கு எண்ணும் மையங்களுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

மேற்கண்ட தகவலை சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.