10 நாட்களில் புதிய மருத்துவமனை… சேலம் மக்களுக்கு ஆறுதல் செய்தி சொன்ன அமைச்சர்!

0
154

10 நாட்களில் புதிய மருத்துவமனை… சேலம் மக்களுக்கு ஆறுதல் செய்தி சொன்ன அமைச்சர்!

சேலம் மாவட்டத்தில் கொரனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், சேலம் அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் படுக்கை வசதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதி கிடைக்காமல் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கை வசதிகளை அதிகரிக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக சேலம் இரும்பாலை பகுதியில் புதியதாக ஆக்சிஜன் வசதியுடன் சுமார் 500 படுக்கைகள் வசதிகள் கூடிய தற்காலிக மருத்துவமனை அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

இந்நிலையில், அமைச்சர் செந்தில்பாலாஜி இரும்பாலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் இடத்தையும் பார்வையிட்டார். பின்னர் அவர் கூறும்போது, ‘அடுத்து 10 நாட்களுக்குள் இரும்பாலை வளாகத்தில் தற்காலிக மருத்துவமனை அமைக்கும் பணிகள் நிறைவடையும். இதற்கென 1000 கிலோ வாட் மின்வசதி ஏற்படுத்தித்தப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஆக்சிஜன் வசதியுடன்கூடிய 500 படுக்கைகள் கொண்ட மருத்துவமனை வசதி மாவட்ட மக்களுக்கு கிடைக்கும். தேவையின் அடிப்படையில் இந்த படுக்கைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்படும்’ என்று செந்தில் பாலாஜி தெரிவித்தார்.