கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

0
181

கொரோனா வார்டுக்குள் சென்றது ஏன்? – முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

சென்னை, கோவையில் கொரோனா வார்டுக்குள் சென்றது தொடர்பாக மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையின் கொரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை முழு பாதுகாப்பு கவச உடை அணிந்து சென்று, நேரில் சந்தித்து நலம் விசாரித்தேன். மருந்தோடு சேர்த்து மற்றவர்கள் ஊட்டும் நம்பிக்கையும், ஆறுதலும் நோயைக் குணப்படுத்தும்.

தமிழக அரசு நம்பிக்கை ஊட்டும். கொரோனா வார்டுக்குள் செல்லவேண்டாம் என்று அக்கறை மிகுந்த அறிவுரைகள் சொல்லப்பட்டாலும், தம் உயிரையும் பணயம் வைத்துப் போராடும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள், பாதிக்கப்பட்டவர்கள், அவர்தம் குடும்பத்தினருக்கு நம்பிக்கை ஊட்டவே உள்ளே சென்றேன். இந்த பெருந்தொற்றை நாம் வெல்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர் நிவாரண நிதிக்கு ஈரோடு மாவட்ட பத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 25 ஆயிரம் நிதி வழங்கப்பட்டது.
செய்யாறு பத்திரிக்கையாளர்கள் சார்பாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு (கொரானா பேரிடர் நிவாரணத்திற்காக) எம்எல்ஏ ஒ.ஜோதி முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் சந்திப் நந்தூரியிடம் ரூ.25,000/- நிதி வழங்கப்பட்டது.