டேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பல திருப்பங்களுடன் காதலில் முடியும் பயணம்

0
234

டேக் டைவர்ஷன் விமர்சனம்: டேக் டைவர்ஷன் பல திருப்பங்களுடன் காதலில் முடியும் பயணம்

சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் படத்தை எழுதி இயக்கியிருக்கிறார் சிவானி செந்தில்.

இதில் சிவக்குமார், பாடினி குமார், காயத்ரி, ஜான் விஜய், ராம்ஸ், விஜய்டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகியோர் நடித்துள்ளனர்.

தொழில் நுட்ப கலைஞர்கள்:- இசை – ஜோஸ் பிராங்க்ளின், ஒளிப்பதிவு – ஈஸ்வரன் தங்கவேல், படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி,பாடல்கள்-மோகன் ராஜன், பிஆர்ஒ-சக்தி சரவணன்.

இருபத்தி ஆறு வயதில் தொடங்கும் பெண் தேடும் படலம் முப்பது வயது ஆகும் வரை தொடர்ந்து கொண்டிருக்க, சிவக்குமாரின் அண்ணன் வற்புறுத்தலால், முதலில் பார்த்த பெண் காயத்ரியையே திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறார். இந்த சமயத்தில் வேலை பறி போகும் சூழலில் மாட்டிக் கொள்ளும் சிவக்குமார், தன் மனேஜர் ஜான் விஜய்யிடம் திருமண நிச்சயம் நடக்கும் நேரத்தில் வேலை பறி போகாமல் காப்பாற்றும்படி கேட்டுக் கொள்கிறார். இதற்கு ஜான் விஜய் பாடினி குமார் என்ற பெண்ணை அழைத்துக் கொண்டு பாண்டிச்சேரி வந்தால் வேலை நிரந்தரம் செய்கிறேன் என்று சொல்ல, வேறு வழியில்லாமல் பாடினி குமாரை தேடிப் போகிறார் சிவக்குமார். அங்கே பாடினிகுமார் தாதா ராம்ஸ்சிடம் மாட்டிக் கொண்டிருப்பதை பார்க்கிறார். அந்தப் பெண் எட்டு லட்சம் கடன் பட்டிருப்பதால் அதை அடைத்து விட்டு மீட்டுச் செல்லுமாறு சொல்ல, அந்த இடத்திலிருந்து தாதா ராம்ஸ்சை ஏமாற்றி பாடினி குமாரை காரில் சிவக்குமார் அழைத்துச் செல்கிறார். சிவக்குமாரின் காரில் நண்பரும், பாடினி குமாரும் பயணிக்க, வழியில் பாடினியை ஒருதலையாக காதலிக்கும் இளைஞன் மற்றும் காயத்ரியையும் அழைத்துச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. அனைவரும் பாண்டிச்சேரிக்கு பயணிக்கும் நேரத்தில், தாதா ராம்ஸ் தன் அடியாட்களுடன் காரில் பின் தொடர்கிறார். இறுதியில் சிவக்குமார் பாண்டிச்சேரியில் பாடினி குமாரை கொண்டு சேர்த்தாரா? சிவக்குமாருக்கும் காயத்ரிக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததா? தாதா ராம்ஸ்சிற்கு எட்டு லட்சம் பணம் கிடைத்ததா? தாதா, மேனேஜர், காதலன் இவர்களிடமிருந்து பாடினி குமார் தப்பித்தாரா? என்பதே க்ளைமேக்ஸ்.

கதை நாயகனாக சிவக்குமார், நாயகிகளாக பாடினி குமார் மற்றும் காயத்ரி, வில்லனாக ஜான் விஜய், காதல் தாதாவாக ராம்ஸ், விஜய் டிவி புகழ் ஜார்ஜ் விஜய், பாலா ஜெ சந்திரன், சீனிவாசன் அருணாச்சலம் ஆகிய மற்ற கதாபாத்திரங்களும் தேவையான நடிப்பை வெளிப்படுத்தி படத்திற்கு வலு சேர்க்கிறார்கள்.

தேவா பாடிய மஸ்தானா மாஸ் மைனரு என்கிற கானா பாடலும், சாண்டி நடனம் அமைத்துள்ள யாரும் எனக்கில்லை ஏனடி? என்கிற  காதல் பாடலும் ஜோஸ் பிராங்க்ளின் இசையில் கவனம் ஈர்த்துள்ளது.

ஈஸ்வரன் தங்கவேல் ஒளிப்பதிவு சென்னை மற்றும் பாண்டிச்சேரி பயணமும், சேசிங் காட்சிக்கோணங்களை நேர்த்தியாக கொடுத்துள்ளனர்.

படத்தொகுப்பு – விது ஜீவா, நடனம்-சாண்டி சிறப்பு.

பல வருடங்களாக கடன் பிரச்னையால் தவிக்கும் பெண்ணை பலர் துரத்த ஒரே நாளில் சென்னையிலிருந்து பாண்டிச்சேரி அழைத்து வந்து அந்த கடனிலிருந்து காப்பாற்றி பாதுகாப்பாக மீட்கும் இளைஞன் என்ற கதைக்களத்துடன் இயக்கியுள்ளார் சிவானி செந்தில். ஒரே திசையில் சென்று கொண்டிருக்கும் வாழ்க்கை திருப்பத்துடன் வேறு திசையில் பயணித்தாலும் சென்றடைவது ஒரே இலக்கு என்பதை தன்னால் முடிந்த வரை சிறப்புடன் கொடுக்க முயற்சி செய்துள்ளார் இயக்குனர் சிவானி செந்தில்.

மொத்தத்தில் சிவானி பிலிம்ஸ் சார்பில் சுபா செந்தில் மற்றும் நண்பர்களுடன் இணைந்து  தயாரித்திருக்கும் டேக் டைவர்ஷன் பல திருப்பங்களுடன் காதலில் முடியும் பயணம்.