கொடை விமர்சனம் : கொடை வள்ளலுக்கு வரும் சிக்கல் | ரேட்டிங்: 1.5/5

0
273

கொடை விமர்சனம் : கொடை வள்ளலுக்கு வரும் சிக்கல் | ரேட்டிங்: 1.5/5

எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரித்து கொடை படத்தின் கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசெல்வம். இதில் கார்த்திக் சிங்கா, ரோபோ சங்கர், அனயா, எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்னம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன், கத்தரிக்கோல் மனோகர், கிரேன் மனோகர், ஆனந்த் பாபு, வின்சென்ட் ராய், கே.ஆர்.விஜயா, நளினி, வைஷாலி தணிகா, ஜீவிதா, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், சிம்பு தௌபிக் ஆகியோர் நடித்துள்ளனர்.
தொழில்நுட்ப கலைஞர்கள்:-இசை: சுபாஷ் கவி, ஒளிப்பதிவு : அர்ஜுனன் கார்த்திக், எடிட்டர்: ஜி.சசிகுமார், கலை: கே.எம்.நந்தகுமார்,நடனம்: தினேஷ், ராதிகா,சண்டைக்காட்சிகள்: பீனிக்ஸ் பிரபு,ஆடைகள்: பி.ரெங்கசாமி, ஒப்பனை: பி.எஸ்.குப்புசாமி, ஸ்டில்ஸ்: மோகன்,தயாரிப்பு நிர்வாகி: எம்.பாலமுருகன், இணை தயாரிப்பு: டாக்டர் எஸ்.பாண்டி துரை, பிஆர்ஒ-சதீஷ் ஏய்ம்.

கார்த்திக் சிங்கா கொடைக்கானலில் ஒரு தங்கும் விடுதியில் வேலை செய்துகொண்டு ஆதரவற்ற குழந்தைகள் இல்லம் நடத்தி வருகிறார். தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் அனாதை குழந்தைகளுக்கு செலவிடும் நல்ல குணம் படைத்தவர். இந்நிலையில் தீயணைப்பு துறையில் பணியாற்றும் அனயாவை காதலிக்க, அவளுடைய தந்தை கார்த்திக்கிடம் 5 லட்ச ரூபாய் கொடுத்து கொடைக்கானலில் இருக்கும் பைனான்ஸர் அஜய் ரத்னத்திடம் இந்த பணத்தை கொடுத்து 25 லட்சம் ரூபாய் வாங்கி வர சொல்கிறார். ஆசரமத்தை நடத்த சிரமபப்படும் கார்த்திக் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொள்கிறார். பைனான்ஸியர் அஜய் ரத்னத்திடம் பணம் கொடுக்க, அவர் கார்த்திக்கை ஏமாற்றி விட்டு சென்று விடுகிறார். இதனால் கொதிப்படையும் கார்த்திக் ஏமாற்றிய அஜய் ரத்னத்தை பழி வாங்க திட்டம் தீட்டி பணத்தை மீட்க நினைக்கிறார். கார்த்திக் பணத்தை மீட்டரா? ஏமாற்றி அஜய் ரத்னத்திற்கு தண்டனை வாங்கி கொடுத்தாரா? ஆசிரமம் நடத்த பணம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

கார்த்திக் சிங்கா முதல் படம் போல் இல்லாமல் காதல், சண்டை, நடனம் என்று தேர்ந்த நடிப்பாலும், அனாதைகளுக்கு உதவும் கருணை குணம் கொண்டவராக மனதை கவர்கிறார். காமெடி என்ற பெயரில் வெறுப்பேற்றும் ரோபோ சங்கர், காதலியாக அனயா, சலவை கடை நடத்துபவராக எம்.எஸ்.பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, வில்லனாக அஜய் ரத்னம், போஸ் வெங்கட், சுவாமிநாதன், ஞானசம்பந்தன், கத்தரிக்கோல் மனோகர், கிரேன் மனோகர், ஆனந்த் பாபு, வின்சென்ட் ராய், கே.ஆர்.விஜயா, நளினி, வைஷாலி தணிகா, ஜீவிதா, கராத்தே ராஜா, மீசை ராஜேந்திரன், சிம்பு தௌபிக் என்று ஏகப்பட்ட நட்சத்திரங்கள் படத்தில் வந்து போகிறார்கள்.

இசை: சுபாஷ் கவி, ஒளிப்பதிவு : அர்ஜுனன் கார்த்திக், எடிட்டர்: ஜி.சசிகுமார் ஆகியோர் படத்தின் கதைக்கேற்றவாறு முடிந்தவரை பங்களிப்பை கொடுத்துள்ளனர்.

அனாதை ஆசிரமத்தை எடுத்து நடத்தும் இளைஞனுக்கு கிடைக்கும் நன்கொடையை ஏமாற்றும் பேர்வழியை தன் சாமர்த்தியத்தால் மீட்பதாக திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் ராஜசெல்வம். படத்தின் காட்சிகளும், பயணிக்கும் கதைக்களமும் விறுவிறுப்பு இல்லாமல் தோய்வுடன் பயணிக்கிறது. இதை சரி செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் எஸ்.எஸ்.பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் கொடை வள்ளலுக்கு வரும் சிக்கல்.