5 ஜி தொழில்நுட்ப மனு : நடிகை ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு ரூ.20 லட்சம் அபராதம்

0
157

5 ஜி தொழில்நுட்ப மனு : நடிகை ஜூகி சாவ்லாவுக்கு டெல்லி ஐகோர்ட்டு ரூ.20 லட்சம் அபராதம்

இதனை விசாரித்த நீதிமன்றம், விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு என அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக 20 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

5ஜி அலைக்கற்றை ஆபத்து, அதற்கு அனுமதி தரக்கூடாது என்று டெல்லி உயர்நீதிமன்றத்தில் நடிகை ஜுஹி சாவ்லா வழக்கு தொடர்ந்திருந்தார். அவரை கண்டித்தத்துடன் 20 லட்சம் அபராதம் விதித்துள்ளது நீதிமன்றம்.

ஜுஹி சாவ்லா இந்தியின் முன்னணி நடிகையாக இருந்தவர், இப்போதும் நடிக்கிறார். அவர் சுற்றுச்சூழல் ஆர்வலரும் கூட. அவர் 5ஜி அலைக்கற்றை 4ஜி அலைக்கற்றையைவிட 100 மடங்கு கதிர்வீச்சு கொண்டது, மனிதர்கள், விலங்குகள், பறவைகள் என அனைவரும் பாதிக்கப்படுவார்கள். ஆகவே, 5ஜி அலைக்கற்றைக்கு அனுமதி அளிக்கக் கூடாது என வழக்கு தொடர்ந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், விளம்பரத்துக்காக போடப்பட்ட வழக்கு என அந்த மனுவை தள்ளுபடி செய்ததுடன், நீதிமன்ற நேரத்தை வீணடித்ததாக 20 லட்ச ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தது.

அதே நேரம், அலோபதி மருத்துவம் குறித்து தொடர்ந்து அவதூறு செய்துவருகிறார் பாபா ராம்தேவ். அலோபதி தடுப்பூசிகளே இன்று கொரோனா தொற்றை கட்டுக்குள் வைக்கும் பேராயுதமாக விளங்குகின்றன. இந்த நேரம் அலோபதிக்கு எதிரான அவதூறு பேச்சுகள் மோசமான எதிர்விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. பாபா ராம்தேவ் அலோபதி குறித்து உண்மைக்கு புறம்பானதை பேசக்கூடாது என்று வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், வழக்குப் போட்ட மருத்துவர்களை கண்டித்ததுடன், பாபா ராம்தேவ் விமர்சனம் செய்யக் கூடாது என தடை விதிக்க முடியாது என கூறியது குறிப்பிடத்தக்கது.