2022 பிப்ரவரி வெளியீடாக வரும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

0
167

2022 பிப்ரவரி வெளியீடாக வரும் விஷ்ணு விஷாலின் எஃப்ஐஆர்

முன்னணி நடிகர்களின் படங்களே திரையரங்கில் வெளிவருமா இல்லை ஓடிடியா என்ற சந்தேகம் நிலவுகிற நிலையில், தன்னுடைய எஃப்ஐஆர் திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் விஷ்ணு விஷால்.

முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை, ராட்சசன் என சத்தமில்லாமல் பல வெற்றிப் படங்களை தந்து கொண்டிருக்கிறார் விஷ்ணு விஷால். அவரது நடிப்பில் அடுத்து வெளிவர இருக்கும் படம் எஃப்ஐஆர். பொதுவாக எஃப் ஐஆர் என்றால் காவல் நிலையத்தில் போடப்படும் முதல் தகவல் அறிக்கையை குறிக்கும். ஆனால், இந்த எஃப்ஐஆர் குறிப்பது வேறு.

படத்தில் நாயகனாக வரும் விஷ்ணு விஷாலின் கதாபாத்திரப் பெயர் பைசல் இப்ராஹம் ரயிஸ். இதன் முதல் எழுத்துக்களை வைத்து எஃப்ஐஆர் என படத்துக்கு பெயர் வைத்துள்ளனர். தீவிரவாதம் குறித்த கதையிது என்கிறது படக்குழு. இதில் விஷ்ணு விஷாலுடன் முக்கிய வேடத்தில் கௌதம் வாசுதேவ மேனன், மஞ்சிமா மோகன், ரெபேகா மோனிகா ஜான், ரைசா வில்சன் ஆகியோரும் நடித்துள்ளனர். மனு ஆனந்த் படத்தை எழுதி இயக்கியுள்ளார்.

அருண் வின்சேன்ட் ஒளிப்பதிவு செய்ய, டோனிகிஷோர் எடிட்டிங் செய்துள்ளார். இசை அஸ்வத். விவி ஸ்டுடியோஸ் சார்பில் சுப்ரா, ஆரியன் ரமேஷ் படத்தை தயாரித்துள்ளனர். 2022 பிப்ரவரி மாதம் படம் திரைக்கு வரும் என விஷ்ணு விஷால் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிப்ரவரி 18 ஆம் தேதி படம் திரைக்கு வர வாய்ப்புள்ளது. அதே தேதியில் சிவகார்த்திகேயனின் டான் படத்தை வெளியிட திட்டமிட்டிருப்பது முக்கியமானது.