மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

0
208

மெரினாவில் கலைஞருக்கு நினைவிடம்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் 2.21 ஏக்கரில் ரூ.39 கோடி செலவில் முத்தமிழறிஞர் கலைஞருக்கு நினைவிடம் அமைக்கப்படும் என 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

* மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிடம் அருகே கலைஞர் கருணாநிதிக்கு 2.21 ஏக்கர் பரப்பளவில் ரூ.39 கோடி மதிப்பில் நினைவிடம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். தொடர்ந்து முதலமைச்சர் பேசியதாவது:* கருணாநிதியின் வாழ்க்கை, சிந்தனை குறித்து நவீன ஒளி படங்களுடன் நினைவிடம் அமைக்கப்படும்.

* இன்று நாம் பார்க்கும் தமிழ்நாடு கலைஞர் உருவாக்கியது. 5 முறை முதலமைச்சராக இருந்து தமிழ் வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டத்தை வகுத்தவர் கருணாநிதி.

* 13 முறை தொடர்ந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் கலைஞர். தோல்வி அவரை தொட்டதே இல்லை, வெற்றி அவரை விட்டதே இல்லை.

* கடந்த அரைநூற்றாண்டு காலத்தில் நிரந்தர தலைப்புச்செய்தியாக இருந்தவர் கருணாநிதி. 80 ஆண்டுகால பொது வாழ்க்கையில் 60 ஆண்டுகள் சட்டசபை உறுப்பினராக இருந்தவர் மு.கருணாநிதி. இந்திய அரசியலை வழிநடத்திய அரசியல் ஞானி முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம் சூட்டினார்.