‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸில்’ ஸ்பெஷல் தோற்றம்?- 13 வருடம் கழித்து வடிவேலுடன் இணையும் பிரபு தேவா

0
105

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸில்’ ஸ்பெஷல் தோற்றம்?- 13 வருடம் கழித்து வடிவேலுடன் இணையும் பிரபு தேவா

நடிகர் வடிவேலு தற்போது இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் ‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ என்ற திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இந்த திரைப்படத்தில் வடிவேலு ஒரு சிறப்பு பாடலை பாடியுள்ளார். அந்த பாடலுக்கு நடன இயக்குனராக நடிகர் பிரபு தேவா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம் நடிகர் பிரபுதேவா மற்றும் நடிகர் வடிவேலு ஜோடி 13 வருடங்களுக்குப் பிறகு இணைந்துள்ளது.

மேலும், இந்தப் பாடலில், நடிகர் வடிவேலுடன், சிறப்பு தோற்றத்தில் பிரபுதேவா தோன்றுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ‘மனதை திருடிவிட்டாய்’ படத்திற்குப் பிறகு, நடிகர் வடிவேலு, பிரபுதேவா கூட்டணி மீண்டும் இந்தப் படத்தில் இணையவுள்ளது. ‘காதலன்’ திரைப்படத்தில், நடிகர் வடிவேலு மற்றும் பிரபுதேவா இணைந்து ஆடிய ‘பேட்ட ரப்’ பாடல் பட்டிதொட்டியெங்கும் பிரபலம் ஆனதால், இந்தப் பாடலும், அதைப்போல் பிரபலம் அடையும் என்று படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளனர். நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். லைகா புரொடக்சன்ஸ் தயாரித்துள்ளது.