நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது ” ஜம்பு மகரிஷி”

0
48

நட்சத்திர பட்டாளத்துடன் உருவாகி உள்ளது ” ஜம்பு மகரிஷி”

விவசாயத்தில் முதல் இடத்தில் இந்தியாவை வெளிநாடு ஒன்று தங்கள் நாட்டு அதிகாரிகள் நூறுபேரை தமிழ்நாட்டுக்கு அனுப்பி மரபணு விதைகளை மாற்றிகொடுத்து விவசாயத்தை அழிக்க அனுப்புகிறது. இதை தெரிந்துகொண்ட கதாநாயகன் அவர்களை எதிர்கொண்டு விவசாயத்தையும், விவசாயிகளையும் எப்படி காப்பாற்றுகிறான் என்பதை கதைக்களமாக கொண்டு உருவாகி உள்ள படம் தான் ” ஜம்பு மகரிஷி ” திரைப்படம்.

திருச்சி அருகே திருவானை காவலில் ஜீவசமாதி அடைந்த ஜம்பு மகரிஷியின் உண்மை வரலாற்றோடு இதன் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராதாரவி, வாகை சந்திரசேகர், டெல்லி கணேஷ், நம்பிராஜ், மீரா கிருஷ்ணன், பாகுபலி பிரபாகர், வையாபுரி, கராத்தே ராஜா ஆகியோருடன் , ” மஸ்காரா ” புகழ் அஸ்மிதா நாயகியாகவும், புதியவரான பாலாஜி நாயகனாக நடிக்கிறார்.

நிறைய பொருட்செலவில் 250 அடி உயர சிவன் சிலை வடித்து சென்னை அருகே இதற்காக பிரம்மாண்டமான அரங்கம் அமைத்து 2000 துணை நடிகர் நடிகையர் ஐம்பதிற்கும் மேற்பட்ட நடன குழுவினர் பங்கேற்க பாடல் காட்சி அருமையாக படமாக்கப்பட்டது.

அரக்கன் வாதாவியாக பாகுபலி பிரபாகரும்  அவனை அழிக்க நினைக்கும் ருத்ர வீரனாக பாலாஜியும் மோதும் அனல் பறக்கும் சண்டைக்காட்சியும் பிரமாதமாக படமாக்கப்பட்டுள்ளது.

பிரபல இயக்குனரான பகவதி பாலா இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றி உள்ளார்.சிவசங்கர் நடன பயிற்சியையும், டிராகன் பிரகாஷ் சண்டை பயிற்சியையும், ராஜ்கீர்த்தி படத்தொகுப்பையும், பி. புவனேஸ்வரன் வசனத்தையும் கவனித்துள்ளனர்.

தேனிசை தென்றல் தேவா இசையமைக்க பாலாஜி, புவனேஸ்வர், ஜார்ஜ் மூவரும் பாடல்களை எழுதி உள்ளனர்.

காசியில் உள்ள வாரணாசி, ஹைதராபாத்தில் உள்ள கோல்கொண்டா கோட்டை, விஜயவாடா மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடத்தி உள்ளனர்.

டி.வி.எஸ். பிலிம்ஸ் சார்பில் பி-பாலாஜி — பி.தனலட்சுமி இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர்.

தணிக்கை அதிகாரிகளால் ” யு “சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள ஜம்பு மகரிஷி படத்தின் கதை திரைக்கதை வசனம் எழுதி நாயகனாக நடித்து பி-தனலட்சுமியுடன் இணைந்து தயாரித்துள்ள புதியவரான பி.பாலாஜி இதை தன் முதல் படமாக இயக்கி உள்ளார்.