சர்வதேச மகளிர் தினம்: மனைவி சுரேகாவை பாராட்டிய மெகாஸ்டார்

0
151

சர்வதேச மகளிர் தினம்: மனைவி சுரேகாவை பாராட்டிய மெகாஸ்டார்

மெகாஸ்டார் சிரஞ்சீவி தான் வெற்றிகரமான ஹீரோவாக இருப்பதற்கு அவரது மனைவி சுரேகா தான் காரணம் என்று கூறினார். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அனைத்து பெண்களுக்கும் சிரஞ்சீவி வாழ்த்து தெரிவித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி, சிரஞ்சீவி தனது மனைவி சுரேகாவுடன் சேர்ந்து, தனது ரத்த வங்கியில் பணிபுரியும் பெண் மருத்துவர்கள் மற்றும் பெண்களை கவுரவித்தார்.

நிகழ்ச்சியில் சிரஞ்சீவியின் மனைவி சுரேகா, அவரது சகோதரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் சிரஞ்சீவி பேசுகையில், ‘குடும்பத்தை பொறுப்பேற்று நடத்தும் ஒவ்வொரு பெண்ணுக்கும் வணக்கம். பெண்களின் உழைப்பை அங்கீகரிக்க இன்றைய நாள் சரியான நாளாகத் தோன்றியது. அதனால்தான் இந்த திட்டத்தை நாங்கள் அமைத்துள்ளோம்.

பெண்கள் அதிகாரம் பெற அனைவரும் பாடுபட வேண்டும். அனைத்துத் துறைகளிலும் சாதனை படைத்து பெண்கள் அதிகாரம் பெற்று வருகின்றனர். பெண்கள் நிலவு மற்றும் ஒலிம்பிக்ஸ் அளவுக்கு உயர்ந்துள்ளனர். பெண்களின் சக்தியால் உலகம் பெருமை கொள்ள வேண்டும் என்று சிரஞ்சீவி கூறினார்.

மேலும் இந்த நிகழ்ச்சியில் சிரஞ்சீவி தனது மனைவி சுரேகா பற்றி பாராட்டி பேசினார். ‘நான் படங்களில் கவனம் செலுத்தி வெற்றிகரமான கதாநாயகன் ஆனதற்கு என் மனைவி சுரேகாதான் காரணம். வீட்டில் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்கிறாள். நான் படங்களில் பிஸியாக இருந்தால் வீட்டில் இருக்கும் என் உடன்பிறந்தவர்கள் மற்றும் குழந்தைகளை அவள் பார்த்துக் கொள்வாள். என்றார்.