சமூக ஆஸ்கர் விருது – சூர்யா-ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு…!

0
187

சமூக ஆஸ்கர் விருது – சூர்யா-ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் தேர்வு…!

சூர்யா.ஜோதிகா மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகியோருக்கு உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கப்படவுள்ளது.

உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19 ஆம் தேதியன்று இல்லினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேவில் நடைபெற உள்ளது.

இந்த உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது, மனித சமூகங்களை வலுப்படுத்துவதில் உரிய பங்களிப்புகளை கொடுத்து பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் சர்வதேச மற்றும் சமூக கதாநாயகர்களை அடையாளம் கண்டு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் 11-வது பாராளுமன்ற உலகளாவிய சமூக ஆஸ்கர் விருது தொடர்பான 4 ரிவுகள் கொண்ட பட்டியலை அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் உறுப்பினராக இருக்கும் டேனி டெவிஸ் வெளியிட்டுள்ளார்.

சூர்யா-ஜோதிகா – சமூக ஆஸ்கர் விருது

இதில் ஜெய் பீம் படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகாவுக்கு 2021 ஆம் ஆண்டின் மதிப்புமிக்க விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

உண்மை சம்பவத்தை கொண்டு சமூக நீதியை முன்நிறுத்தி படம் வெளியிட்டதற்காக இந்த விருது வழங்கப்பட உள்ளது.

ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு, சூர்யா, ஜோதிகா, இயக்குனர் ஞானவேல் மற்றும் படக்குழுவினர் ஆகியோர் நேரடியாக வந்து விருதுகளை பெற்று செல்லுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினுக்கு சர்வதேச வளரும் நட்சத்திரம் விருது!

இதேபோல் ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021’ என்ற பிரிவில் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது.

இதேபோல், ‘சர்வதேச வளரும் நட்சத்திரம் 2021′ என்ற பிரிவில் தி.மு.க. இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு விருது வழங்கப்பட உள்ளது. உலகெங்கிலும் வளர்ந்து வரும் தலைவரால் செய்யப்பட்ட சிறந்த பணியை அங்கீகரிப்பதை நோக்கமாக கொண்டு இந்த விருது வழங்கப்படுகிறது.

உலகளாவிய சமுதாய ஆஸ்கர் விருது வழங்கும் விழா அடுத்த மாதம் 19-ந் தேதியன்று இலினொய் மாகாணத்தில் உள்ள நேபர்வில்லேயில் நடைபெற உள்ளது.