”காதலின்பேரில் ரூ.2.30 லட்சம் மோசடி”- ‘பிக்பாஸ்’ ஜூலி காவல்நிலையத்தில் புகார்

0
190

”காதலின்பேரில் ரூ.2.30 லட்சம் மோசடி”- ‘பிக்பாஸ்’ ஜூலி காவல்நிலையத்தில் புகார்

பிக்பாஸ் ஜூலி, தன்னையொருவர் காதலிப்பதாகக் கூறி சுமார் ரூ.2.30 லட்சம் மோசடி செய்திருப்பதாக காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஜூலி கொடுத்துள்ள அப்புகாரில், மனிஷ் என்பவர் தன்னை காதலிப்பதாகக் கூறி தன்னிடமிருந்து இருசக்கர வாகனம், நகை, பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்துவிட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிக்பாஸ் மற்றும் தொலைக்காட்சி நிகழ்வுகளில் அண்மைக்காலத்தில் பிரபலமானவர் நடிகை மரியா ஜூலி. இவர் புனித தோமையர் மலை பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கும் அமைந்தகரை அய்யாவூ காலனி துரைசாமி தெருவில் வசிக்கும் மனிஷ் (வயது 26) என்பவருக்கும் கடந்த 4 வருடங்களாக காதல் இருந்ததாக ஜூலி குறிப்பிடுகிறார்.

மனிஷ் அழகு நிலையத்தில் வேலை பார்த்து வருவதாகவும்; திருமணம் செய்து கொள்வதாகக் கூறி தன்னிடமிருந்து அவர் பணம் பெற்று அதன்மூலம் பல்சர் இருசக்கர வாகனம், பிரிட்ஜ் மற்றும் இரண்டு சவரன் செயின் உள்ளிட்டவற்றை பெற்றுக் கொண்டதாகவும், தற்போது அனைத்தையும் பெற்றுக்கொண்ட பின்னர் மனிஷ் தன்னை திருமணம் செய்ய மறுப்பதாகவும் அமைந்தகரை காவல் நிலையத்தில் ஜூலி புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவ்விஷயத்தில் போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.