ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல் – விக்னேஷ் சிவன் வருத்தம்

0
223

ஆஸ்கர் போட்டியில் இருந்து வெளியேறிய கூழாங்கல் – விக்னேஷ் சிவன் வருத்தம்

ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா- விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்த படம் ‘கூழாங்கல்’. இந்தப் படத்தைப் பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்பியது படக்குழு. பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் ‘கூழாங்கல்’ திரையிடப்பட்டு பல்வேறு விருதுகளையும் வென்றது. இந்த நிலையில், வரும் 2022-ம் ஆண்டு மார்ச் 27-ம் தேதி ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ளது.

இதனையடுத்து சமீபத்தில் இந்தியா சார்பில் ஆஸ்கர் விருதுப் போட்டிக்கும் ‘கூழாங்கல்’ படம் பரிந்துரைக்கப்பட்டது. ‘கூழாங்கல்’ திரைப்படம் இறுதிப் பட்டியலில் இடம்பெறும் என்று விக்னேஷ் சிவன் நம்பிக்கை தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆஸ்கார் விருது போட்டியில் இருந்து ‘கூழாங்கல்’ திரைப்படம் வெளியேறியிருக்கின்றது.

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பதிவில், ”ஆஸ்கார் பட்டியலில் நம் படம் வந்திருக்கிறதா என்று பார்ப்பதே பெரிய சாதனை. இறுதிப் பட்டியலில் இடம்பிடித்திருந்தால் எங்களைப் போன்ற சினிமா தயாரிப்பாளர்களுக்கு, நாம் கொண்டு வந்திருக்கும் மகிழ்ச்சியும் பெருமையும் குறிப்பிடத்தக்கதாக இருந்திருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.