அமீர்கானுடன் மூன்றாவது திருமணமா? அதிர்ச்சியில் நடிகை

0
236

அமீர்கானுடன் மூன்றாவது திருமணமா? அதிர்ச்சியில் நடிகை

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வரும் அமீர்கானுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். அமீர்கான் சமீபத்தில் தனது இரண்டாவது மனைவி கிரண் ராவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பாலிவுட் திரையுலகில் பரபரப்பான செய்தியாக வலம் வந்து கொண்டிருப்பது அமீர்கான்-பாத்திமா சனா திருமண வதந்திதான். பாத்திமா சனா ஷேக் , அமீர்கான் நடித்து பெரிய ஹிட் ஆன தங்கல் படத்தில் அவரது மகளாக நடித்தவர். ஏற்கனவே அமீர்கானுக்கு இரண்டு திருமணம் நடந்து முடிந்த நிலையில் அவருக்கு விவாகரத்து ஆனது. தற்போது மூன்றாவதாக பாத்திமா சனா ஷேக்கை மணம் முடிக்க இருப்பதாகப் பேச்சு எழுந்து வருகிறது.

இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகை பாத்திமா சனா சாய்க் வதந்தி குறித்து பேசியுள்ளார். அதில்,

இது குறித்து நடிகை பாத்திமா சனா ஷேக் கூறியதாவது :

இது வெறும் வதந்திதான் இது பற்றி என்னிடம் கேள்வி கேட்காமல் சிலர் தங்கள் விருப்பம்போல் எழுதுகிறார்கள். முன்பெல்லாம் இதுபோன்ற செய்திகள் வரும்போது தனக்கு கஷ்டமாக இருக்கும். இப்போது அப்படி இல்லை. காரணம் வதந்திகள் அளவுக்கதிகமாக பரவுவது வழக்கமாகி விட்டது. இதை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்ளத் தேவையில்லை. இந்த பிரச்சனையை கண்டுக்கொள்ளாமல் அப்டியே விட்டுவிட்டால் அதுவே தானாக அடங்கி விடும் என்றார்.