பைஜு’ஸ் சென்னையில் ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்-ஐ அறிமுகப்படுத்துகிறது

0
175

பைஜு’ஸ் சென்னையில் ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்-ஐ அறிமுகப்படுத்துகிறது

4 முதல் 10-ம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு போட்டித்தன்மையை பெற சிறந்த ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கற்றல் முறைகளை வழங்குகிறது
● சென்னை முழுவதும் 8 மையங்கள் செயல்படும்
● இந்த ஆண்டு 200 நகரங்களில் 500 மையங்களை தொடங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
● இந்த ஆண்டு நாடு முழுவதும் 10,000-க்கும் மேற்பட்ட வேலைகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது
● அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1 மில்லியனுக்கும் அதிகமான மாணவர்களை சேர்ப்பதை நோக்கமாக கொண்டுள்ளது

சென்னை, பிப்ரவரி 18, 2022: 115 மில்லியன் பதிவு செய்யப்பட்ட கற்பவர்களை கொண்ட உலகின் முன்னணி தொழில்நுட்ப கல்வி நிறுவனமான பைஜு’ஸ், இன்று மாணவர்களுக்கான சிறந்த ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கற்றல் அனுபவங்களை ஒன்றிணைக்கும் ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்-ஐ அறிமுகப்படுத்துவதாக அறிவித்தது. சென்னையில், 8 பைஜு’ஸ் கல்வி மையங்கள் செயல்படும். 6 மையங்கள் 2021 டிசம்பர் முதல் செயல்படுகின்றன. இந்த மையங்கள் எழும்பூர், அண்ணாநகர், போரூர், சேலையூர், வேளச்சேரி, புரசைவாக்கம், ஆழ்வார்பேட்டை மற்றும் வடபழனி ஆகிய இடங்களில் அமைந்துள்ளன.

4 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கான ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்’ என்பது, அக்கம்பக்கத்தில் நேரடியாக சென்று படிக்கும் தொழில்நுட்ப கல்வி மையங்களாக இருக்கும். அவை உலகத் தரம் வாய்ந்த கற்றல் அனுபவத்தை மையமாக வைத்து, இரு ஆசிரியர் மாதிரியின் மூலம் சிறந்த பயன்களை அளிக்கும்.

பைலட் திட்டத்தின் ஒரு பகுதியாக தொடங்கப்பட்ட முதல் 80 மையங்களின் வலுவான நேர்மறையான கருத்துக்களுடன், ‘பைஜு’ஸ் 2022 ஆம் ஆண்டில் 200 நகரங்களில் 500 மையங்களை தொடங்கும். ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்’ ஆனது பள்ளிக்கு பின் கற்றலை அதன் 360 டிகிரி கற்பித்தல் மற்றும் கற்றல் அமைப்புடன் மட்டும் மறுவரையறை செய்யும். இந்தியா முழுவதும் 10,000+ பேருக்கு வேலை வாய்ப்புகளை ஒரு வருடத்திற்குள் உருவாக்குகிறது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் இந்தத் திட்டத்தில் 1 மில்லியன் மாணவர்களை சேர்க்க பைஜு’ஸ் இலக்கு வைத்துள்ளது.

‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்’ சிறந்த தொழில்நுட்பம், ஆசிரியர்கள் மற்றும் கட்டமைப்பை ஒருங்கிணைக்கிறது. இது மாணவர்களுக்கு ஆரோக்கியமான மற்றும் பயனுள்ள கற்றல் அனுபவத்தை உறுதி செய்கிறது. தரமான கற்பித்தல் முறைகள், சிறந்த கற்றல் அனுபவங்களை வழங்குவதோடு, சிறந்த பயன்களை செயல்படுத்தும் நல்ல ஆசிரியர் இணைப்பையும் வழங்குகின்றன. சந்தேகத்தின் வெளிப்பாடு, வகுப்பில் மாணவர் ஈடுபாடு, எந்த நேரத்திலும் சந்தேகம் தீர்க்க ஆதரவு, வழக்கமான சோதனைகள், பயிற்சி அமர்வுகள் மற்றும் அடிக்கடி பெற்றோர் -ஆசிரியர் சந்திப்புகள், உயர்தர ஆசிரியர்களுக்கான அணுகல் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட கவனம் ஆகியவற்றை கண்டறியும் தொழில்நுட்பத்துடன் மாணவர்கள் இரு வகைகளிலும் சிறந்ததை பெறுகிறார்கள்.

தொடக்க விழா குறித்து கருத்து தெரிவித்து ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்’ இன் தலைவர் ஹிமன்ஷு பஜாஜ் கூறுகையில், “சென்னையில் ‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்’ தொடங்கப்படுவதை அறிவிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். நாடு முழுவதும் உள்ள எங்கள் மாணவர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும். அதே வேளையில் தரமான கல்வியை அணுகும் வகையில் மாற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை இது பலப்படுத்துகிறது. தொற்றுநோய் காரணமாக, மாணவர்கள் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் கற்றலுக்கு இடையில் ஊசலாட வேண்டியிருந்தது, ஆனால் ‘பைஜு’ஸ் இன் இந்த புதிய சலுகை நாடு முழுவதும் உள்ள மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் சிக்கலான கவலைகளை நிவர்த்தி செய்யும். தனிப்பயனாக்கப்பட்ட கற்றலின் அடுத்த நிலை ‘பைஜு’ஸ் இன் கல்வி மையங்கள். இது மாணவர்களுக்கு 1. தொழில்நுட்பம் செயல்படுத்தும் நேரடி மையங்களில் இரண்டு ஆசிரியர் மாதிரியை வழங்கும். 2. ஆசிரியர்- மாணவர் தனிப்பட்ட இணைப்பு மூலம் பகுப்பாய்வினால் ஆதரிக்கப்படும் முன்னேற்றம் மற்றும் செயல்திறன் மதிப்பீடு 3. ‘பைஜு’ஸ் இன் ஆன்லைன் சுற்றுச்சூழல் அமைப்புக்கான அணுகல். மாணவர்களின் தேவைகளை மையமாக வைத்து, இந்த புதிய சலுகை ஒரு முன்னோடியாக நிற்கும். மேலும் எதிர்காலத்திற்கு தயாராக இருக்கும் மாணவர்களை வளர்ப்பதற்கும், முன்னோக்கிய மற்றும் தனித்துவமான கல்விச் சூழலுக்கும் வழிவகுக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

‘பைஜு’ஸ் டியூஷன் சென்டர்’ பயிற்சிகள் மாணவர்கள் கற்றல் இடைவெளிகளை போக்கவும், கருத்தியல் புரிதலை வலுப்படுத்தவும், வழக்கமான பயிற்சி மற்றும் தேர்வுகள் மூலம் பரீட்சை தயார் நிலையை உறுதி செய்யும் வகையில் கற்றலை வலுப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் தங்களின் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் வகுப்புகளுக்கு அதே ஆசிரியரை கொண்டிருப்பார்கள், அவர்கள் தங்கள் தனிப்பயனாக்கப்பட்ட கற்றல் பயணங்களுக்கு ஆதரவளிப்பார்கள்.

தற்போதைய சூழ்நிலை மற்றும் மாணவர் தேவைகளுக்கு ஏற்ப, இந்த துவக்கத்தின் மூலம், ‘பைஜு’ஸ் மாணவர்களை மையமாக கொண்ட அணுகுமுறையை மீண்டும் உறுதிப்படுத்துகிறது, மேலும் கற்பவர்களின் உண்மையான தேவைகளின் அடிப்படையில் புதிய மற்றும் புதுமையான அனுபவங்கள், தயாரிப்புகள் மற்றும் சேவைகளை உருவாக்குகிறது. தொற்றுநோய்க்கு பிந்தைய உலகில் கல்வியின் எதிர்காலமாக கலந்து கற்றல் உருவாக்கப்ப்பட்டுள்ள நிலையில், ‘பைஜு’ஸ் இன் கல்வி மையம் இந்த கட்டமைப்புக்கான புதிய வரையறைகளை அமைக்கிறது.

கடந்த ஆண்டு, நிறுவனம் ‘பைஜு’ஸ் வகுப்புகளை அதன் கற்பவர்களுக்கு இரண்டு ஆசிரியர்களின் நன்மையுடன் அறிமுகப்படுத்தியது. 115 மில்லியன் பதிவுசெய்யப்பட்ட மாணவர்கள் மற்றும் 7 மில்லியன் கட்டண சந்தாக்களுடன், ‘பைஜு’ஸ் ஆண்டு புதுப்பித்தல் விகிதத்தை 86% காண்கிறது. எல்லோருக்கும் கல்வி என்ற ‘பைஜு’ஸ்-இன் சமூக முன்முயற்சியின் கீழ், ‘பைஜு’ஸ் ஆனது 3.4 மில்லியன் குழந்தைகளுக்கு டிஜிட்டல் கற்றல் மூலம் கல்வியை அணுக உதவியது. 2025 ஆம் ஆண்டுக்குள் பின்தங்கிய சமூகங்களை சேர்ந்த 10 மில்லியன் குழந்தைகளை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது.