ஜுசி கெமிஸ்ட்ரியின் விற்பனையகம் சென்னையில் தொடக்கம்!

0
122

ஜுசி கெமிஸ்ட்ரியின் விற்பனையகம் சென்னையில் தொடக்கம்!

சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் பர்சனல் கேர் தயாரிப்புகளின் இந்தியாவின் முதல் முழுமையான தொகுப்பு

தமிழ்நாட்டில் இரண்டாவது விற்பனையகத்தை சென்னையில் தொடங்கியிருப்பதன் மூலம் தனது பாரம்பரியத்தை கௌரவிக்க இந்த பிராண்டு விரும்புகிறது

சென்னை, 1 ஏப்ரல் 2022: தனிநபர் பராமரிப்பிற்கான (பர்சனல்கேர்) தயாரிப்புகளுக்காக இந்தியாவிலேயே முதன்முதலாக உருவான பிராண்டாக பெயர் பெற்றிருக்கும் ஜுசிகெமிஸ்ட்ரி, சந்தையில் அதன் இருப்பை இன்னும் வலுப்படுத்த இப்போது முனைந்திருக்கிறது. காஸ்மாஸ் V3 தரநிலையின்படி எக்கோசெர்ட் (ஃபிரான்ஸ்) அமைப்பால் சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் தயாரிப்புகளின் முழுத்தொகுப்பை இந்த பிராண்டு கொண்டிருக்கிறது.

கோயம்புத்தூரில் தனது விற்பனையகத்தை வெற்றிகரமாக தொடங்கி நடத்தி வருவதைத்தொடர்ந்து சென்னை மாநகரின் பிரபலமான பீனிக்ஸ் மார்கெட் சிட்டிமாலில் ஏப்ரல் 2 ஆம் தேதி யிலிருந்து தனது 2வது விற்பனையகத்தை இந்த பிராண்டு தொடங்குகிறது.

கோயம்புத்தூர், சென்னை மற்றும் அருகிலுள்ள நகரங்களில் வசிக்கும் மக்களின் ஆதரவே தனது முதல் விற்பனையகத்தின் வெற்றிக்கு காரணம் என்று கருதுகின்ற இந்த பிராண்டு, சென்னை மாநகரமக்களுக்கு பிரத்யேகமான சருமப்பராமரிப்பு அனுபவத்தை வழங்க முயற்சியை மேற்கொண்டிருக்கிறது. வாடிக்கையாளருக்கு முன்னுரிமையளிக்கும் இந்த பிராண்டு, தயாரிப்புகளை வாடிக்கையாளர்கள் தொட்டு,  உணர்ந்து பார்த்து தனித்துவமான பரிந்துரைகளை பெறுகின்ற மற்றும் இந்த பிராண்டின் தயாரிப்புகள் பற்றிய வரலாற்றை புரிந்துக்கொள்கின்றவாறு வாடிக்கையாளரை மையமாகக்கொண்ட ரீடெய்ல் அனுபவத்தின் முக்கியத்துவத்தை சரியாகப்புரிந்து கொண்டிருக்கிறது.

425 சதுர அடி பரப்பளவில் அமைந்திருக்கும் இந்த விற்பனையகத்தில் இந்த பிராண்டு வழங்குகின்ற சான்றளிக்கப்பட்ட ஆர்கானிக் மற்றும் இயற்கைத் தயாரிப்புகளின் ஒட்டுமொத்தத் தொகுப்பையும் பார்வையிட்டு, விளக்கங்கள் பெற்று இனிய அனுபவத்தைப் பெறமுடியும். சருமப்பராமரிப்பு, தலைமுடி பராமரிப்பு மற்றும் உடல்பராமரிப்பு, அரோமா தெரபி, சிறார்களுக்கான பராமரிப்பு என பல்வேறு பிரிவுகளிலும், வகையினங்களிலும் இந்த பிராண்டின் தயாரிப்புகள் அனைத்தும் மிகஅழகாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிறுவனத்தின்இணை – நிறுவனரும் மற்றும் தலைமை இயக்க அதிகாரியுமான மேகாஆஷர், இவ்விற்பனையக தொடக்கம் பற்றி கூறியதாவது: “எமது பல ஆண்டு கால முயற்சிகளின் பலனாக இந்த ஸ்டோர் தொடங்கப்பட்டுள்ளது. உண்மையில் சிலகாலத்திற்கு முன்பே இதுநிகழ்ந்திருக்க வேண்டும். அதுமட்டுமன்றி, எங்களது நிறுவனத்தின் வேர்கள் இங்கு இருப்பதால் ஒரு இயற்கையான தேர்வாக சென்னை மாநகரம் இருக்கிறது. இம்மாநகருக்கு நாங்கள் வருகைதந்த போதெல்லாம், கிடைத்த வரவேற்பும், அன்பும் எங்களை பிரமிக்கச் செய்திருக்கிறது. பெருந்தொற்றுக்கு பிறகு, ஏறக்குறைய இரண்டு ஆண்டுகள் கழித்து நம்மைச்சுற்றி உலகம் இயல்பு நிலைக்கு முழுமையாக வந்து கொண்டிருக்கும் நிலையில், ஜுசிகெமிஸ்ட்ரியின் அனுபவத்தை நேரில் அனுபவிக்க மக்களை வரவேற்பதற்கு இதுவே சரியானவாய்ப்பு என்று நாங்கள் கருதினோம். எமது பிரதான விற்பனையகத்தில் அனைவரையும் வரவேற்க நாங்கள் ஆவலோடு காத்திருக்கிறோம்.”

இப்பிராந்தியத்தை அடித்தளமாக கொண்ட பிராண்டாக இருப்பதால், தென்னிந்தியா ஒரு முக்கிய சந்தையாக இதற்கு இருந்து வருகிறது. இந்த சமூகத்தோடு இணைந்து செயலாற்றி, நுகர்வோரை நன்றாக புரிந்து கொண்டிருப்பதால், புதுமையான தயாரிப்புகளை வரவேற்க மற்றும் வாங்கிப்பயன்படுத்த தென்னிந்திய மாநிலங்கள் விரும்பி முன்வருகின்றன என்று இந்த பிராண்டு கருதுகிறது. நகரமயமாக்கல் இம்மாநிலங்களில் அதிகமாக இருப்பதும் இந்த பிராண்டின் தயாரிப்புகளுக்கு பொருத்தமான சந்தையாக இதனை ஆக்கியிருக்கிறது.

சென்னை மாநகரின் மையப்பகுதியில் பீனிக்ஸ் மார்கெட் சிட்டி அமைவிடத்தில் இந்த விற்பனையகம் அமைந்திருக்கிறது. காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை வாடிக்கையாளர்களுக்கு சேவையளிக்க இது திறந்திருக்கும்.