கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

0
213

கொல்கத்தா அணி வீரர்களை தொடர்ந்து சென்னை அணியை சேர்ந்த 3 பேருக்கு கொரோனா பாதிப்பு

ஐபிஎல் போட்டியில் விளையாடும் வீரர்கள் கடுமையான பயோ பாதுகாப்பு வளையத்தில் உள்ளனர். இதையும் மீறி வீரர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சார்ந்த மூவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. பிரபல விளையாட்டு ஊடக நிறுவனம் தெரிவித்துள்ள செய்தியின் படி பார்த்தால் நிர்வாகிகள் இருவர் உட்பட மொத்தம் மூவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது பரிசோதனையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவர்களில் வீரர்களில் யாரும் கொரோனாவால் பாதிக்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. சென்னை அணியின் தலைமைச் செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சுப் பயிற்சியாளர் பாலாஜி மற்றும் பேருந்து கிளீனர் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதே போல கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையிலான இன்றைய லீக் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொல்கத்தா அணியின் வீரர்கள் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்தீப் வாரியர் என இருவருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில் இந்த இரு அணிகளுக்கும் இடையிலான போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.