கொரோனா அதிகரிப்பு: தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்- மாநகராட்சி ஆணையர்

0
237

கொரோனா அதிகரிப்பு: தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்- மாநகராட்சி ஆணையர்

சென்னை:  சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

* சென்னையில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம்.

* சென்னையில் சராசரியாக 350க்கு மேல் கொரோனா பாதிப்பு இருக்கிறது.

* கொரோனா தடுப்பூசி போடுவதால் பக்கவிளைவுகள் எதுவும் வராது.

* சென்னையில் 40 லட்சம் பேர் கொரோனா தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது.

* சென்னையில் தேர்தல் பணியில் உள்ள 30 ஆயிரம் பேரில் 10 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

* லாக்டவுன் போடப்படும் என்ற தகவலில் உண்மையில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.